News June 28, 2024
2023-24 ஆண்டில் ரூ.64,682 கோடி கடன் வழங்க இலக்கு

மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 2024 -25 ஆம் நிதியாண்டுக்கான வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகத்தை வெளியிட்டு பேசிய அவர், கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் 2024-25 ஆம் நிதியாண்டில் விவசாயம், தொழில் கடன் என பல பிரிவுகளில் ரூ.64,682 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News August 15, 2025
கோவையில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் (ஆகஸ்ட் 15) நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
News August 15, 2025
கோவை: B.E/B.Tech படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!

கோவை: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள்<
News August 15, 2025
உஷார் மக்களே..கோவையில் இப்படியும் மோசடி!

கோவையில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி இரண்டு நபர்களிடம் ரூ.40.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டால், 0422-2300600 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.விழிப்புடன் இருக்க, இந்தத் தகவலைப் ஷேர் பண்ணுங்க