News January 22, 2025

200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மட்டுமின்றி, சொத்துவரி செலுத்தாத வீடுகளிலும், குடிநீர் இணைப்பை துண்டிக்கும்படி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரே மாதத்தில் வரி செலுத்தாத 200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, வரி பாக்கியை உடனே செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

திண்டுக்கல்: காட்டு மாடு தாக்கி மூதாட்டி பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் ஆடலூர் மலைப்பகுதியில் இன்று (நவம்பர் 5) கூலித் தொழிலாளி பாக்கியம் (60) என்பவர் காட்டு மாடு தாக்கியதில் உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து கன்னிவாடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2025

திண்டுக்கல்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News November 5, 2025

திண்டுக்கல்: டிகிரி போதும்! ரயில்வே துறையில் வேலை

image

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <>www.rrbchennai.gov.in <<>>என்ற தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.25,500 – ரூ.35400 வழங்கப்படும். கடைசி தேதி : 20.11.2025 ஆகும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!