News January 22, 2025
200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மட்டுமின்றி, சொத்துவரி செலுத்தாத வீடுகளிலும், குடிநீர் இணைப்பை துண்டிக்கும்படி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரே மாதத்தில் வரி செலுத்தாத 200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, வரி பாக்கியை உடனே செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
பழனியில் சோகம்.. பக்தர் பலி!

கரூர் மாவட்டம் அழகாபுரி சிபுதூரை சேர்ந்தவர் சுரேஷ். சென்ட்ரிங் தொழிலாளியான இவர், உறவினர்களுடன் பழனிக்கு பாதயாத்திரை வந்திருந்தார். இன்று காலை ஆயக்குடி அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, சென்னையிலிருந்து பாலக்காடு நோக்கி வந்த ரயில் மோதி அவர் உயிரிழந்தார். பழனி ரயில்வே உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 25, 2025
திண்டுக்கல் மக்களே உடனே SAVE பண்ணுங்க!

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கான புகார் எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ரெட்டியார்சத்திரம் 0451- 2400195, குஜிலியம்பாறை 04551-293606, நிலக்கோட்டை 04543-294699, வடமதுரை 04551-2911823, ஆத்தூர் 0451-2911823, திண்டுக்கல் 0451-2999603, பழனி 04545-242180, கொடைக்கானல் 04542-243188 என ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, SHARE பண்ணுங்க!
News December 25, 2025
திண்டுக்கல்: மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சில்வார்பட்டி பகுதியில் பிரபு (38) என்பவர், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஈஸ்வரியை (35) சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். இந்நிலையில் கொலையாளி பிரபுவை, சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


