News January 22, 2025
200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திண்டுக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மட்டுமின்றி, சொத்துவரி செலுத்தாத வீடுகளிலும், குடிநீர் இணைப்பை துண்டிக்கும்படி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரே மாதத்தில் வரி செலுத்தாத 200 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, வரி பாக்கியை உடனே செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
BREAKING: திண்டுக்கல்லில் 3 லட்சம் பெயர்கள் நீக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில்,
▶️ திண்டுக்கல்- 60,493
▶️ பழனி- 52,174
▶️ ஒட்டன்சத்திரம்- 34,127
▶️ ஆத்தூர்-48,145
▶️ நிலக்கோட்டை-41,850
▶️ நத்தம்- 46,133
▶️ வேடசந்தூர்- 41,972
▶️ என மொத்தம் மாவட்டத்தில் 3,24,000 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
திண்டுக்கல்: உங்களிடம் ரேஷன் அட்டை இருக்கா?

திண்டுக்கல் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)
News December 19, 2025
வத்தலகுண்டு: சிறுமிக்கு பாலியல் தொல்லை

வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு அளித்ததாக தாண்டிக்குடியைச் சேர்ந்த யாதவ்குமார் (19) மீது புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், யாதவ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


