News March 19, 2025
போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையைச் சேர்ந்தவர் அருள்நேசன் (29). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Similar News
News September 20, 2025
இயற்கையோடு வாழ்ந்தவர் இயற்கை எய்தினார்

‘தாவரங்களின் என்சைக்ளோபீடியா’ என்று போற்றப்படும் நாட்டின் தலைசிறந்த தாவரவியல் விஞ்ஞானி Dr.ஹேமா சானே (85) காலமானார். புனே கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றிய இவர் ஓய்வுக்கு பின்பும் ஆய்வை தொடர்ந்தார். இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக சாகும்வரை மின்சாரத்தை பயன்படுத்தாத இவர், தன் சொத்துகளை தான் வளர்த்த நாய், பூனைகள், கீரிப்பிள்ளை மற்றும் பறவைகளுக்கு எழுதி வைத்திருக்கிறார்.
News September 20, 2025
விஜய்க்கு உடனுக்குடன் பதில் தரும் DMK

முதலீடுகள் பற்றி விஜய் விமர்சித்த நிலையில், <<17773206>>CM ஸ்டாலின்<<>> வீடியோ மூலம் பதிலளித்திருந்தார். நாகை ஹாஸ்பிடல் குறித்த குற்றச்சாட்டுக்கும் உடனடி பதில் தந்தார் மா.சுப்பிரமணியன். முன்னதாக, DMK vs TVK என்ற தவெகவின் நிலைப்பாட்டுக்கு, ‘இதற்கெல்லாம் பதிலளிக்க அவசியமில்லை’ என ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு CM, DCM முதல் அமைச்சர்கள் வரை பதிலளித்து வருவது பேசுபொருளாகியுள்ளது.
News September 20, 2025
இந்த தண்ணீரை யூஸ் பண்ணா முடி அடர்த்தியா வளரும்

தேநீர் தூள் கொதிக்க வைத்த தண்ணீரை தலைக்கு தேய்ப்பதால் முடி கொட்டுவது நின்று, அடர்த்தியாக வளரும் என கூறப்படுகிறது. இதில் உள்ள கேட்டசின்கள் மற்றும் பாலிபினால்கள் முடி உடைவதை தடுக்கிறதாம். அதோடு அதில் உள்ள காஃபின் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி அடர்த்தியாக வளர உதவுவதாக கூறப்படுகிறது. இத நீங்க ட்ரை பண்ணியிருக்கீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.