News March 4, 2025

20 மனைவிகள், 104 பிள்ளைகள், 144 பேரக்குழந்தைகளா!

image

இந்த அதிசய மனிதர் டான்ஸானியாவில் வசித்து வருகிறார். 1961ல் முதல் திருமணம் செய்தவரின் பழங்குடியினத்தில் அடுத்தடுத்த திருமணங்களுக்கு தடையில்லை என்பதால், 20 பெண்களை அவர் மணமுடித்துள்ளார். அனைத்து மனைவிகளுடனும் அவர் ஒரே வீட்டில்தான் வாழ்கிறார். 104 வாரிசுகளின் மூலம் அவருக்கு 144 பேரன், பேத்திகளும் துள்ளி விளையாடுகிறார்கள். இந்த குடும்பமே ஒரு கிராமம் போல, அதன் ராஜாவாக கபிங்கா வாழ்கிறார்.

Similar News

News December 4, 2025

தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால்?

image

மாரடைப்பு என்பது சமீபகாலங்களில் எல்லா வயதினருக்கும் ஏற்படுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது, நெஞ்சில் கடுமையான வலி, மூச்சுத் திணறல், மயக்கம், அதிகப்படியான வியர்வை போன்றவை இருக்கும். இதுபோன்ற சுழலில் நீங்கள் தனியாக இருந்தால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 4, 2025

தமிழக மக்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது: பாஜக

image

இன்றே தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு நயினார் நாகேந்திரன் விரைந்துள்ளார். அப்போது தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த நயினார் நாகேந்திரன், தமிழக மக்களுக்கு நீதி கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்னை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

News December 4, 2025

₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது HAPPY NEWS

image

டிச.12-ம் தேதி விடுபட்ட, தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். விடுபட்டவர்களிடம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், டிச.12-ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில், கூடுதல் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

error: Content is protected !!