News March 4, 2025
20 மனைவிகள், 104 பிள்ளைகள், 144 பேரக்குழந்தைகளா!

இந்த அதிசய மனிதர் டான்ஸானியாவில் வசித்து வருகிறார். 1961ல் முதல் திருமணம் செய்தவரின் பழங்குடியினத்தில் அடுத்தடுத்த திருமணங்களுக்கு தடையில்லை என்பதால், 20 பெண்களை அவர் மணமுடித்துள்ளார். அனைத்து மனைவிகளுடனும் அவர் ஒரே வீட்டில்தான் வாழ்கிறார். 104 வாரிசுகளின் மூலம் அவருக்கு 144 பேரன், பேத்திகளும் துள்ளி விளையாடுகிறார்கள். இந்த குடும்பமே ஒரு கிராமம் போல, அதன் ராஜாவாக கபிங்கா வாழ்கிறார்.
Similar News
News November 25, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News November 25, 2025
சற்றுமுன்: விடுமுறை.. வந்தது HAPPY NEWS

கார்த்திகை மகா தீபத்தையொட்டி தி.மலைக்கு டிச.3 உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த விழாவிற்காக தமிழக அரசு ஏற்கெனவே சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், டிச.3, 4-ல் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தி.மலைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
News November 25, 2025
இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கலாமா?

இரவில் உள்ளாடை அணியாமல் தூங்கினால், தூக்கத்தின் தரம் மேம்படும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். உள்ளாடை இல்லையென்றால், காற்றோட்டம் கிடைப்பது தேவையற்ற வெப்பம், ஈரப்பதம் குறையுமாம். இதனால், தளர்வான உடைகள் (அ) உள்ளாடை அணியாமல் இருப்பது உடலை குளிர்விக்க உதவும். அதுமட்டுமின்றி, நீண்ட நேரம் தூங்கும்போது இறுக்கமான உள்ளாடைகளால் சரும எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.


