News October 9, 2025
20 குழந்தைகள் மரணம்: எச்சரித்த மத்திய அரசு

ம.பி., மற்றும் ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடைசி 24 மணிநேரத்தில் 4 மரணங்கள் பதிவான நிலையில், அனைத்து மாநிலங்கள், யூ.பிரதேசங்களுக்கு மத்திய பொது சுகாதார துறை அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. அதன்படி, அனைத்து மூலப் பொருள்களையும், தயாரிக்கப்பட்ட மருந்துகளையும் முழுமையாக சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 9, 2025
பெர்னாட் ஷா பொன்மொழிகள்

▶மனிதர்களுள் இரு வகையினர் உண்டு. திறமையானவர்கள் ஒருவகை, மற்றவர்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள். ▶நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும். ▶இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை. ▶பணம் பசியைத் தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது. ▶பெண்ணை ஒரு பொருள் போல நடத்துவதால் தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.
News October 9, 2025
பாஜக – தவெக இடையே Underground டீலிங்: வன்னியரசு

பாஜக – தவெக Underground டீலிங் போட்டு செயல்படுவதாக வன்னியரசு விமர்சனம் செய்துள்ளார். கரூர் துயரத்தில் RSS, BJP தன்னை ஆதரிக்கும் திமிரில் தான் விஜய் வீடியோ வெளியிட்டு, CM சார் என்னை கைது செய்யுங்க என்று பேசுவதாக அவர் தெரிவித்துள்ளார். தங்களை கொள்கை எதிரி என சொல்லும் விஜய்யை, இதுவரை ஒரு பாஜகவினர் கூட கண்டிக்கவில்லை என்று வன்னியரசு சாடியுள்ளார்.
News October 9, 2025
அடிக்கடி திருமண கனவுகள் வருகிறதா?

➤சிங்கிள்ஸ்க்கு திருமண கனவு வந்தால், புதிய பயணம் தொடங்குமாம். ➤காதலி (அ) தோழியை மணம் செய்வதாக வந்தால், அவர்களுடன் உறவு வலுப்படும். ➤திருமணத்திற்கு பின் வேறொருவரை மணம் செய்வதாக வந்தால், அவரை அதிகம் நேசிக்கிறீர் என அர்த்தம். எனினும், அவரை விட்டு விலகுவது நல்லது. ➤நீங்களோ, மற்றவரோ திருமணத்திற்கு தயாராவதாக கனவு வந்தால், வருத்தம் (அ) பதட்டத்தை குறிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.