News September 28, 2024

20 கடைகளுக்கு சீல் ரூ.6 லட்சம் அபராதம்!

image

திண்டுக்கல், புறநகர், சாணார்பட்டி, ஆத்துார், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம், ஜாபர் சாதிக், ஜோதிமணி உள்ளிட்டோர் கடைகளில் ஆய்வு செய்தனர். 150 கிலோ தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 20 கடைகளுக்கு சீல் வைத்தனர். ரூ.6 லட்சம் அபராதமும் விதித்தனர்.

Similar News

News November 22, 2025

திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் மூலம் (நவம்பர் 22), 2025 அன்று பொதுமக்களுக்கு சைபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் வங்கி கணக்கு விவரங்கள், OTP, கார்டு தகவல்களை தெரியாத நபர்களுடன் பகிர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. அவசர உதவிக்கு, சைபர் குற்ற எண் ‘1930’ அழைக்கலாம்.

News November 22, 2025

பழனி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன. இந்நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், பழனி சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த முருகேஸ்வரி போட்டியிட உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 22, 2025

திண்டுக்கல்லில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

image

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு குடகனாறு பாலம் அருகே கம்பத்திலிருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!