News September 28, 2024
20 கடைகளுக்கு சீல் ரூ.6 லட்சம் அபராதம்!

திண்டுக்கல், புறநகர், சாணார்பட்டி, ஆத்துார், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம், ஜாபர் சாதிக், ஜோதிமணி உள்ளிட்டோர் கடைகளில் ஆய்வு செய்தனர். 150 கிலோ தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 20 கடைகளுக்கு சீல் வைத்தனர். ரூ.6 லட்சம் அபராதமும் விதித்தனர்.
Similar News
News November 12, 2025
திண்டுக்கல்லில் ரூ.61 லட்சம் மோசடி!

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே விவசாய நிலம் விற்பதாக கூறி, கரூரைச் சேர்ந்த வக்கீல் தனசேகரனிடம் ரூ.61 லட்சம் மோசடி செய்ததாக சத்தியமூர்த்தி, ஹேமலதா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, பெண் உள்பட இருவரை கைது செய்தனர். ரூ.75 லட்சத்தில் நிலம் விற்பதாக கூறி முன்பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
News November 12, 2025
திண்டுக்கல் மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்கள் விபரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் நவம்பர் 11 இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனியை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,
News November 12, 2025
திண்டுக்கல்லில் தலைப்புச் செய்திகள்

1.பழனி தாலுகா காவல் நிலையம்: பாஸ்கரன் ஆய்வாளராக பொறுப்பேற்றார்.
2. திண்டுக்கல் மருத்துவமனை: அரசு மருத்துவர்கள் சங்கம் தர்ணா.
3. பழனி நூற்றாண்டுவிழா: கல்வி, உணவு வழங்கல் அமைச்சர்கள் பங்கேற்பு.
4. மாற்றுத்திறனாளிகள்: மாதாந்திர உதவி தொகை உயர்த்த கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.
5. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பயிற்சி வகுப்பு ஆட்சியர் சரவணன் துவக்கம்.


