News September 28, 2024

20 கடைகளுக்கு சீல் ரூ.6 லட்சம் அபராதம்!

image

திண்டுக்கல், புறநகர், சாணார்பட்டி, ஆத்துார், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம், ஜாபர் சாதிக், ஜோதிமணி உள்ளிட்டோர் கடைகளில் ஆய்வு செய்தனர். 150 கிலோ தடை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 20 கடைகளுக்கு சீல் வைத்தனர். ரூ.6 லட்சம் அபராதமும் விதித்தனர்.

Similar News

News September 13, 2025

திண்டுக்கல்: இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

image

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 13, 2025

திண்டுக்கல்: வாலிபர் போக்சோவில் கைது!

image

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அஜீத் ( 21) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி மதுரைக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் நிலக்கோட்டை போலீசார் அஜீத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

News September 13, 2025

திண்டுக்கல்லில் செயின் பறிப்பால் பரபரப்பு!

image

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ஜெயந்தி(40). இவர், தனியார் டியூசன் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(செப்.12) இரவு டியூசன் முடித்து இ.பி காலனி சாலையில் நடந்து வந்துகொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!