News April 3, 2025
கோழி இறைச்சி சாப்பிட்ட 2 வயது சிறுமி சாவு… எச்சரிக்கை!

ஆந்திராவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமி உயிரிழந்தார். பல்நாட்டைச் சேர்ந்த சிறுமி, வீட்டில் இருந்த வேக வைக்காத கோழி இறைச்சியை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடல்நிலை பாதித்த நிலையில் பலியானார். 2021-ல் பறவை காய்ச்சலுக்கு ஹரியானாவில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து 2ஆவது உயிரிழப்பு தற்போது நேரிட்டுள்ளது. ஆகவே, இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிடுங்கள். SHARE IT!
Similar News
News November 27, 2025
இந்தியாவின் முதல் 7 சீட்டர் SUV EV: சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவில் 7 சீட்களை கொண்ட முதல் SUV EV காரை (XEV 9S) மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வேரியண்ட்களுக்கு ஏற்றவாறு 3 வகையான பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் தொடக்கவிலை ₹19.95 லட்சமாகும் (ex-showroom). பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிக பேட்டரி திறன் கொண்ட வேரியண்ட் 0 -100 kph வேகத்தை 7 விநாடிகளில் அடையும். 20 நிமிடங்களில் 80% சார்ஜ் ஏறும் வசதியும் உள்ளது.
News November 27, 2025
புயல் அலர்ட்.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

புயல் எதிரொலியாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை(நவ.28) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள <<18406009>>CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.<<>> அதி கனமழையால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விடுமுறை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வாய்ப்புள்ளது.
News November 27, 2025
BREAKING: இவர்கள் ஓட்டு போட முடியாது!

வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் இடம்பெறாது என்ற தகவலை ECI விளக்கியுள்ளது. டிச.4-ம் தேதிக்குள் SIR படிவத்தை ஒப்படைக்காத நபர்களின் பெயரும், 3 முறை வீட்டுக்கு சென்றும் படிவத்தை வழங்காதவர்களின் பெயரும் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்துள்ளது. அவர்கள் டிச.9 முதல் ஜன.8 வரை Form 6 உடன் உறுதிமொழிப் படிவத்தை கொடுத்து புதிதாக விண்ணப்பிக்கலாம். அதையும் தவறவிட்டால் ஓட்டு போட முடியாது.


