News March 28, 2025
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் 5 பேர் ஊடுருவியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 5 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 31, 2025
தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மா கம்பராமாயணம்: ஆளுநர்

கம்பர் வெறும் கவிஞர் மட்டுமல்ல, பாரதத்தின் நாயகன் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். தமிழ் கலாச்சாரத்தின் ஆன்மாவாக கம்பராமாயணம் உள்ளதாகவும், தமிழகத்தில் கம்பர் கொண்டாடப்படாதது வருத்தத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் கலாச்சாரம் அரசியல் மயமாகியுள்ளதாகவும், அரசியல் காரணங்களால் கலாச்சாரம் மறக்கடிப்படுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
News March 31, 2025
தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டிங் படங்கள்

தமிழ் சினிமாவில் மௌனப்படங்கள் வந்து கொண்டிருந்தபோது, 1931ல் முதல் பேசும்படமாக ‘காளிதாஸ்’ வெளியானது. பாடல்களே இல்லாத படமான ‘அந்த நாள்’, புதுமையான திரைக்கதை அம்சத்துடன் 1954ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. கருப்பு, வெள்ளை படங்களுக்கு மத்தியில், 1958 ஆண்டில் முதல் கலர் படமாக ‘நாடோடி மன்னன்’ ரிலீசானது. தமிழின் முதல் சயின்ஸ் பிக்ஷன் படமாக, 1963ஆம் ஆண்டு ‘கலை அரசி’ வெளியானது.
News March 31, 2025
விரைவில் மாதந்தோறும் மின் கணக்கீடு

மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்திற்கு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அடுத்த 3- 4 மாதங்களுக்குள் தகுதியான நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம், மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற உள்ளது.