News September 10, 2025
குல்காமில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டர்

ஜம்மு & காஷ்மீரின் குல்காமில், நேற்று ஆபரேஷன் குடரின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பாக்.,ஐ சேர்ந்த ரஹ்மான், மற்றொருவர் காஷ்மீரின் தரம்தோராவை சேர்ந்த அமீர் அஹ்மத் தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
Similar News
News September 10, 2025
Like பண்ணுங்க, Share பண்ணுங்க, Comment செய்யுங்க!

சில செய்திகள் உங்களை புன்னகைக்க வைக்கும். சில செய்திகள் கோபப்படுத்தும். வேறு சில செய்திகள், மற்றவர்களுக்கு ஷேர் பண்ண தூண்டும். இப்படி மனதில் தோணும் போது, உடனே அதை வெளிப்படுத்துங்கள். ஆம், உங்களுக்காகவே செய்திகளுக்கு கீழே லைக், டிஸ்லைக், ஷேர், கமென்ட் ஆப்ஷன்களை கொடுத்திருக்கிறோம். இவற்றை பயன்படுத்திப் பாருங்கள். அதுசரி, இந்த செய்திக்கு எத்தனை லைக்ஸ் போடப் போறீங்க?
News September 10, 2025
நேபாளில் சிக்கிய இந்தியர்கள்.. IAF விமானங்களில் மீட்க முடிவு

நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 2 விமானங்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட வன்முறையால், தலைநகர் காத்மண்டுவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால், அங்கு 400 இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க, அங்குள்ள இந்திய தூதரகம் ராணுவத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
News September 10, 2025
பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்? அறிக்கை

துணை ஜனாதிபதியான CP ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த இடத்திலும் அதிமுக என குறிப்பிடவில்லை. மேலும், மோடி உலக தலைவர்களில் முதன்மையானவர், அமித்ஷா இரும்பு மனிதர் என புகழ்ந்துள்ளார். EPS உடனான மோதலுக்கு பிறகு அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அக்கட்சியில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?