News September 3, 2025
+2 மாணவர்கள் இனி அலைய வேண்டாம்!

+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. வெகு தூரத்தில் உள்ள மையங்களுக்கு செல்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே தேர்வுக்காக 10 கி.மீ-க்கு மேல் பயணம் செய்யும் மாணவர்களுக்கு அருகிலேயே மையங்கள் அமைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பரிந்துரை அறிக்கையை அலுவலர்கள் செப்.15க்குள் தேர்வுத்துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
Similar News
News March 5, 2026
உயிர் வாழ்ந்தால் போதும்.. மனம் திறந்த ராணா

நடிகர் ராணா டகுபதி தனது வாழ்க்கையை புரட்டி போட்ட சிறுநீரக மாற்று சிகிச்சை குறித்து மனம் திறந்துள்ளார். சமீபத்திய பாட்காஸ்டில், பாகுபலி 2-க்கு பிறகு பிரேக் எடுத்து சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது உயிர்வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் இருந்ததாக கூறினார். கிட்டதட்ட 3 மாதம் பெட் ரெஸ்டில் இருந்த அவர், சிகிச்சைக்கு பின் தனது உடல்நிலையிலும், தோற்றத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட்டதாக வருந்தியுள்ளார்.
News March 5, 2026
கார்களின் விலை சரசரவென குறைந்தது

கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? மார்ச் மாத சிறப்பு சலுகைகள் தொடங்கி உள்ளன. ஹோண்டா தனது கார்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹57,000 முதல் அதிகபட்சமாக ₹1.97 லட்சம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப் பக்கம் ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். SHARE IT.
News March 5, 2026
OPS மீதான 4 வழக்குகள் ரத்தானது!

OPS-க்கு எதிரான நான்கு வழக்குகளை சென்னை HC ரத்து செய்துள்ளது. கடந்த மக்களவை உள்ளிட்ட தேர்தல்களில் தேர்தல் விதிமுறையை மீறியதாக OPS மீது பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வழக்கில் போதுமான ஆதாரங்களை போலீசார் சமர்ப்பிக்காததை அடுத்து OPS-க்கு எதிரான 4 வழக்குகளையும் ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


