News April 29, 2024
2 மாநிலத்தில் அமைந்துள்ள வினோத ரயில் நிலையம்

நவாபூரில் உள்ள இந்த ரயில் நிலையம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. 2 மாநிலத்திலும் ஒரு பாதி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை வேறுபடுத்துவது என்னவெனில், டிக்கெட் கவுண்டர் அலுவலகம் மகாராஷ்டிராவிலும், அதே நேரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகம் குஜராத்திலும் அமைந்துள்ளது. இங்கு, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளில் அறிவிப்பு செய்யப்படுகிறது.
Similar News
News August 13, 2025
ஸ்ரீதேவியின் 27வது பிறந்தநாள்.. போனி கபூர் உருக்கம்

1990-ல் ஸ்ரீதேவியின் 27-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடந்திருக்கிறது. அப்போது வயது ஏறினாலும், இளமை குறையவில்லை என்பதை குறிப்பதற்காக அவரிடம் ’26-வது பிறந்தநாள் வாழ்த்துகள்’ என கூறியுள்ளார் போனி கபூர். ஆனால் ஸ்ரீதேவியோ போனி கபூர் கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டார். இச்சம்பவத்தை ஸ்ரீதேவியின் 62-வது பிறந்தநாளான இன்று நினைவுகூர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போனி கபூர் பதிவிட்டுள்ளார்.
News August 13, 2025
விமர்சிக்காதீங்க, ஆதரவு தாங்க: சேகர் பாபு

திமுக அளித்த வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை என்பதே தற்போது எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில், அவசரத் தேவைகளை கருத்தில் கொண்டு, அறிவிக்கப்படாத பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களை விமர்சிக்காமல், அதன் நன்மைகளை புரிந்துகொண்டு ஆதரவு தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News August 13, 2025
தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ரிப்பன் மாளிகை முன் போராட்டம் நடத்தும் அவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு போலீசார் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவது தவறு என்றும் தெரிவித்துள்ளது. போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இவ்வாறு கூறியுள்ளது.