News July 10, 2025

தூங்கிக் கொண்டிருந்த 2 கேட் கீப்பர்கள் டிஸ்மிஸ்

image

அரக்கோணம் – செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் உள்ள லெவல் கிராசிங் (LC) பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது LC 40 & LC 44-ல் பணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாக கார்த்திகேயன் & ஆஷிஷ்குமார் ஆகிய 2 கேட் கீப்பர்களும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்புக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் எனத் தெரிய வந்த நிலையில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

Similar News

News July 10, 2025

தவெகவில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!

image

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

News July 10, 2025

இரவு இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: IMD

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாமக்கல், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடுமாம். அதேபோல் சேலம் மற்றும் தருமபுரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?

News July 10, 2025

மகளிர் உரிமைத் தொகை… மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்

image

மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் ஜூலை 15-ல் தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க குடும்பத் தலைவிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இத்திட்ட விரிவாக்கத்துக்கு அரசு ₹7 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கியுள்ளதாகவும், புதிதாக 5,833 பேருக்கு மட்டுமே ₹1,000 கொடுக்க முடியும் என்றும் <<17013157>>அன்புமணி<<>> குண்டை தூக்கி போட்டுள்ளார். புதிய பயனர்களுக்கு பணம் கிடைக்க தாமதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!