News March 18, 2024

ஒரு ரூபாய் கூட நன்கொடை வாங்காத 2 கட்சிகள்

image

தேர்தல் பத்திரங்கள் மூலம் நாட்டிலேயே அதிக நன்கொடை வாங்கிய கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. நாட்டிலுள்ள பல கட்சிகள் கோடி கோடியாக நன்கொடையை வாங்கி குவித்துள்ள நிலையில், தேர்தல் பத்திரங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இடதுசாரி கட்சிகளான சிபிஎம், சிபிஐ ஆகிய 2 கட்சிகள் ஒரு ரூபாய் கூட நன்கொடை பெறவில்லை.

Similar News

News October 30, 2025

ADMM-Plus மாநாடு: மலேசியா செல்கிறார் ராஜ்நாத் சிங்

image

மலேசியாவில் ASEAN மாநாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து, நவ.1-ம் தேதி ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டமைப்பின் பிளஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் மலேசியா புறப்படுகிறார். ADMM-Plus மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

News October 30, 2025

கொத்து கொத்தா கொட்டும் முடி ஒரே வாரத்தில் சரியாக TIPS!

image

வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதாக சித்தா டாக்டர்கள் சொல்றாங்க. ➤2 ஸ்பூன் வெந்தய விதைகளை தண்ணீரில் ஊற வையுங்கள் ➤அதை தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள் ➤ அந்த பேஸ்ட்டை Scalp, தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் ➤பிறகு வெதுவெதுப்பான நீர் & ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.

News October 30, 2025

நாளை மறுநாள் இங்கு பள்ளிகளுக்கு லீவு இல்லை!

image

மழை காரணமாக கடந்த 22-ம் தேதி விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 1-ம் தேதி(சனிக்கிழமை) பள்ளிகள் இயக்கும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று தொடர் மழை காரணமாக 17 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வீடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்ற மாவட்டங்களில் இருந்தும் விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!