News December 31, 2024
IT துறையில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்பு

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 2030ம் ஆண்டுக்குள் இந்திய IT துறையில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கெஸ் IT ஸ்டாப்பிங் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பில், குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்பங்கள் மட்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும், அதிகபட்சமாக பெங்களூருவில் 43.5% வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
Similar News
News March 8, 2026
₹8,000 வரை ஊதிய உயர்வு.. அரசின் இன்ப அதிர்ச்சி

ரேஷன் கடை ஊழியர்களுக்கு TN அரசு ஊதிய உயர்வு அளித்ததன் மூலம், புதிய பணியாளர்களுக்கு ₹2,000, சீனியர்களுக்கு ₹8,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஊதிய உத்தரவுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகி இருப்பதாக அனைத்து ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அகவிலைப்படியை 58% ஆக உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 8, 2026
கண்களை பாதுகாக்க இதை செய்ய மறக்காதீர்

*அதிக நேரம் எதையும் உற்றுப் பார்க்காதீர்கள். கண்களை அடிக்கடி சிமிட்டுவது அவசியம். *குடல் சுத்தமாக இருந்தால் கண் பார்வையும் தெளிவாக இருக்கும். *இரு உள்ளங்கைகளால் இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். *வெளிச்சம் குறைந்த இடங்களில் இப்படி பயிற்சி செய்வது நல்லது. SHARE IT
News March 7, 2026
விஜய்க்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா? திருமா பதில்

வரும் தேர்தலில் விஜய் எதிர்க்கட்சியாக அமர வாய்ப்புள்ளதாக <<19316817>>ஜோதிமணி <<>>கூறியிருந்தார். இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, அது ஜோதிமணியின் கருத்து; மக்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டும் என பதில் அளித்தார். மேலும், விஜய்க்கு ஊடக வெளிச்சம் அதிகமாக இருப்பதாகவும், TN அரசியலையே அவர் தலைகீழாக மாற்றப்போகிறார் என்ற அளவுக்கு திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதாகவும் திருமா கூறியுள்ளார்.


