News October 8, 2025

+2 மதிப்பெண் சான்று.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

2014 – 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனித்தேர்வர்களாக +2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் சுமார் 2 லட்சம் பேர் இன்னும் மார்க் ஷீட்டை பெற்றுக்கொள்ளவில்லை என TN அரசு தெரிவித்துள்ளது. 2026 ஜனவரி 10-ம் தேதிக்குள் மார்க் ஷீட்டை பெற்றுக்கொள்ளாவிட்டால் அவற்றை அழிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், மார்க் ஷீட்டை வாங்காதவர்கள் உடனடியாக கல்வித்துறையை அணுகி பெற்றுக்கொள்ளவும். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 8, 2025

₹500 கோடி வசூலை நெருங்கிய காந்தாரா: சாப்டர் 1

image

கன்னடம் மட்டுமின்றி, தமிழ் உள்பட வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிநடை போட்டு வருகிறது ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படம் முதல் நாளிலேயே ₹100 கோடி வசூலை நெருங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில், 6 நாள்களில் ₹427.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் ₹500 கோடியை எட்டுவது மட்டுமல்லாமல், ₹1,000 கோடி வசூலித்து Sandalwood-ல் புது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 8, 2025

என்னது! உலகிலேயே ஆபத்தான உயிரினம் இதுவா?

image

கொசுதான் உலகிலேயே ஆபத்தான உயிரினம் என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. இந்த சிறிய பூச்சி கடிப்பதால், டெங்கு, மலேரியாவால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 7 – 10 லட்சம் பேர் வரை இறக்கின்றனர். 2025-ல் தமிழ்நாட்டில் மட்டும் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த மோசமான உயிரினத்திடம் இருந்து உங்களை <<17946581>>பாதுகாத்துக்கொள்ளுங்கள்<<>> மக்களே. SHARE.

News October 8, 2025

கொலை செய்வது எப்படி? சிறுவனால் அதிர்ந்த ChatGPT !

image

ஒரு டெக்னாலஜியை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் நன்மையும், தீமையும். USA-வில் 13 வயது பள்ளி சிறுவன், தனது நண்பனை எப்படி கொல்வது என ChatGPT-யிடம் கேட்டுள்ளான். இது பள்ளியின் Digital Monitoring மூலம் போலீசுக்கு தெரியவந்தது. விசாரணையின்போது, தான் விளையாட்டாக இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளான். சிறுவர்கள் டெக்னாலஜிகளை எப்படி யூஸ் பண்றாங்க என பெரியவர்கள் கண்காணிப்பது மிகவும் அவசியம்.

error: Content is protected !!