News April 16, 2025
சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.13 லட்சம் வெகுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
Similar News
News October 30, 2025
₹441 லட்சம் கோடி.. உலகின் NO.1 நிறுவனமான Nvidia

உலகின் முதல் $5 டிரில்லியன் (₹441 லட்சம் கோடி) சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக Nvidia உருவெடுத்துள்ளது. அதுவும் முதல் $4 டிரில்லியன் மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்த 3 மாதங்களில் இந்த சாதனையை படைத்துள்ளது. கிராஃபிக்ஸ் சிப் தயாரிப்பில் இருந்து AI சிப் தாயாரிப்புக்கு மாறியதில் இருந்து Nvidia-ன் பங்குகள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 2022-ல் OpenAI தொடங்கியது முதல் அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.
News October 30, 2025
‘விக்ரம் 63’ படத்தை இயக்கும் குறும்பட இயக்குநர்

‘விக்ரம் 63’ படத்தை ‘மாவீரன்’ பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அப்படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு குறும்படத்தை இயக்கி புகழ் பெற்ற அறிமுக இயக்குநர் தான் விக்ரம் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக மீனாட்சி சவுத்ரியும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
News October 30, 2025
உள்நோக்கத்துடன் EC செயல்படுகிறது: ஆர்.எஸ்.பாரதி

TN-ல் SIR பணிகளை உள்நோக்கத்துடன் EC செயல்படுத்துவதாக ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் திருட்டுத்தனமாக நீக்கப்பட்டதாகவும், அதுபோல TN-ல் செய்வார்களோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார். EC அறிவித்த அட்டவணையில் கிறிஸ்துமஸ், பொங்கல் விடுமுறையை தவிர்த்து மீதமுள்ள நாள்களில் 6.19 கோடி வாக்காளர்களிடம் SIR பணிகளை முடிக்க இயலுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


