News April 16, 2025
சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.13 லட்சம் வெகுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
Similar News
News September 18, 2025
ஆரோக்கியமான உடலுக்கு

வாழ்க்கையில் பெரிய பலன்கள், பெரும்பாலும் குட்டி குட்டி தினசரி பழக்கங்கள் மூலம் ஏற்படுகின்றன. அவற்றை நாம் தினமும் கடைப்பிடிப்பதன் மூலம் நமது ஆற்றல் மேம்படும், நல்ல தூக்கத்தையும் பெறலாம். அந்த குட்டி குட்டி பழக்கங்கள் என்ன என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அதை ஒவ்வொன்றாக பாருங்க. இதில், எதை முதலில் தொடங்க இருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
ராகுலின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேர்தல் ஆணையம்

ராகுல் காந்தி கூறிய <<17748198>>குற்றச்சாட்டுகள்<<>> தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களை நீக்க நடந்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், அது குறித்து புகார் அளித்து விசாரணை நடைபெறுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது என ECI திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
News September 18, 2025
காசாவை நினைத்து நெஞ்சம் பதறுகிறது: ஸ்டாலின்

காசாவில் நடைபெறும் சம்பவங்களால் சொல்லமுடியாத அளவுக்கு வேதனையடைந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் அழுகை, பட்டினிக் காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது; அப்பாவி உயிர்கள் நசுக்கப்படும்போது அமைதி காக்க முடியாது எனக் கூறிய அவர், காசாவில் போரை நிறுத்துவது குறித்து இந்தியா உறுதிப்பட பேசவும், உலகம் ஒன்றுபட்டு, இப்போதே இந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தியுள்ளார்.