News April 16, 2025

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்

image

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.13 லட்சம் வெகுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

Similar News

News December 18, 2025

விஜய் பரப்புரை.. முதல் அதிர்ச்சி சம்பவம்

image

விஜய் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற இளைஞருக்கு திடீரென்று உடல்நிலை பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்து வந்ததால், அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்த உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தவெகவினர், அவரை மீட்டு போலீஸ் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறை ஹாஸ்பிடலில் அனுமதித்துள்ளனர்.

News December 18, 2025

இந்திய-வங்கதேச உறவு பாதிக்கப்படாது: ஷேக் ஹசீனா

image

வங்கதேச<<18539019>>பொதுத்தேர்தலில்<<>>, அவாமி லீக் கட்சிக்கு தடை விதித்திருப்பது, ஜனாநாயகத்தை கேலியாக்குவது போன்றது என அக்கட்சி தலைவர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் நேர்மையானதாக இருக்காது என குற்றஞ்சாட்டிய அவர், தடை செய்தாலும் கட்சியை அழிக்க முடியாது என்று கூறியுள்ளார். வரலாறு, கலாசாரத்தால் பிணைக்கப்பட்ட <<18591819>>இந்திய-வங்கதேச உறவு<<>> சிலரின் இடைபட்ட செயல்பாட்டால் பாதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 18, 2025

வீரர்கள் Safe.. மக்களின் துயரம் தீருமா?

image

வட மாநிலங்களில் காற்று மாசு காரணமாக, மக்கள் சுவாசிக்கவே அவதிப்பட்டு வருகிறார்கள். இதன் உச்சமாக, லக்னோவில் நடைபெறவிருந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா T20I போட்டியும் <<18595035>>ரத்தானது<<>>. காற்றின் தரம், அதாவது AQI கிட்டத்தட்ட 490-ஐ நெருங்கியதால், போட்டி கைவிடப்பட்டுள்ளது. இனியாவது மக்கள் பாடும் துயரை அறிந்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன. இதற்கு என்னதான் தீர்வு?

error: Content is protected !!