News April 16, 2025
சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.13 லட்சம் வெகுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
Similar News
News January 7, 2026
என் நண்பர் நெதன்யாகு: PM மோடி

இஸ்ரேல் PM நெதன்யாகுவுடன், PM மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது நண்பர் நெதன்யாகுவுக்கும், இஸ்ரேல் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இருநாடுகள் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது பற்றி பேசியதாக கூறிய அவர், பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்த்து போராடுவதை இருநாடுகளும் உறுதிப்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி

ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரும் வழக்கில் ஜன.9-ல் தீர்ப்பு வழங்கப்படும் என மெட்ராஸ் HC தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, தணிக்கை வாரியம் விதிகளை காற்றில் பறக்கவிட்டதாக படக்குழு குற்றஞ்சாட்டியது. கோர்ட் உத்தரவு பிறப்பித்தாலும், உடனடியாக சான்றிதழ் வழங்குவது சாத்தியமில்லை என கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்ட தேதியில் படம் ரிலீசாக வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
News January 7, 2026
அடுத்த விண்வெளி புரட்சிக்கு தயாராகும் இந்தியா!

பெங்களூருவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘OrbitAID Aerospace’ புதிய வரலாறு படைக்க உள்ளது. விண்வெளியிலேயே செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பும், இந்தியாவின் முதல் ‘AayulSAT’ செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இதனை, வரும் 12-ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. இதன் மூலம், செயற்கைக்கோள்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதோடு, ஏவுதலுக்கான செலவுகளையும், விண்வெளி குப்பைகளையும் குறைக்கலாம்.


