News April 16, 2025
சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.13 லட்சம் வெகுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
Similar News
News December 13, 2025
இது சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: ராகுல்

கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்., தலைமையிலான UDF கூட்டணி கணிசமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இது ஒரு தீர்க்கமான தீர்ப்பு என ராகுல் காந்தி கூறியுள்ளார். கேரளாவில் UDF மீதான நம்பிக்கை வளர்ந்து வருவதற்கான சிறப்பான அறிகுறியாக இந்த தேர்தல் முடிவு உள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல், இது வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
மக்கள் நாயகன் காலமானார்… கண்ணீருடன் இரங்கல்

மனிதனுக்கு மனிதனே உதவ முன்வராத அவசர காலத்தில், கிளிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த <<18542461>>ஜோசப் சேகர்<<>>(73) இப்போது பூவுலகில் இல்லை. புற்றுநோய் பாதிப்பால் மறைந்த அவர், பல்லாயிரக்கணக்கான கிளிகளை அனாதையாக விட்டுச் சென்றிருக்கிறார். ஜோசப் சேகரின் மறைவுக்கு அரசியல் கட்சிகள், பறவைகள் நல ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த பறவை மனிதரின் வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதே நிதர்சனம்.
News December 13, 2025
வானம் விட்டு வந்த வெண்ணிலவே கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில், காலை நேர பனியாக சேலை, இதயம் பேச மறந்த வார்த்தையாக கம்மல், காற்றில் மிதக்கும் காதலாக கூந்தல், மலர்ந்த தாமரையாக முகம் என நடக்கும் கவிதையாக எழுதப்பட்டிருக்கிறார். வானம் விட்டு வந்த வெண்ணிலவு போல, சத்தமில்லாமல் பாடும் ராகமாக இருக்கிறார். உங்களுக்கும் போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


