News April 16, 2025
சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.13 லட்சம் வெகுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
Similar News
News December 18, 2025
அந்தரங்க போட்டோ.. டீச்சர்கள் வசமாக சிக்கினர்

தஞ்சாவூரில் உதவி HM, கணித ஆசிரியையின் அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக மிரட்டிய டிரெயினிங் ஆசிரியர்கள் கைதாகியுள்ளனர். அரசு பள்ளியின் உதவி HM செல்போனை திருடிய டிரெயினிங் டீச்சர்கள் கலை சாரதி, இனியவர்மன் இருவரும் ₹5 லட்சம் கேட்டு மிரட்டினர். உதவி HM போலீசில் புகார் அளித்ததை அடுத்து 2 பேரும் கம்பி எண்ணுகின்றனர். மேலும், தகாத முறையில் பழகியதாக உதவி HM, கணித ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
News December 18, 2025
இந்திய குடியுரிமையை துறந்த 20 லட்சம் பேர்

கடந்த 2011 முதல் 2024 வரையிலான 14 ஆண்டுகளில், 20 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கொரோனாவிற்கு பிறகான கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், சராசரியாக ஆண்டுக்கு 2 லட்சம் பேர் குடியுரிமையை துறந்துள்ளதாகவும் கூறியுள்ளது. தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு குடிபெயரவே அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
News December 18, 2025
விஜய் அதிமுகவில் இணைந்து விடலாம்: செம்மலை

ஈரோடு பரப்புரையில் எம்ஜிஆர் குறித்து பேசிய விஜய், அதிமுகவை மறைமுகமாக விமர்சித்தார். இந்நிலையில், எம்ஜிஆர், பற்றி பேசும் விஜய் அதிமுகவில் இணைந்து விடலாமே என்று செம்மலை பதிலடி கொடுத்துள்ளார். விஜய் பேச்சை நாங்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை எனக் கூறிய அவர், பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டதாக அர்த்தமாகி விடாது; திமுகவிற்கு மாற்று எப்போதும் அதிமுகதான் என்று தெரிவித்துள்ளார்.


