News April 16, 2025

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்

image

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.13 லட்சம் வெகுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

Similar News

News January 1, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. முதல் நாளே வந்த அறிவிப்பு

image

ஒவ்வொரு மாதமும் ‘தாயுமானவர்’ திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், இம்மாதம் ரேஷன் பொருள்கள் வீடு தேதி வரும் தேதி வெளியாகியுள்ளது. ஆம்! ஜன.4, 5-ல் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதை முதல் மாவட்டமாக திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 1, 2026

முட்டைகோஸால் மரணமா?

image

உபி.,யில் தீராத தலைவலியால் அவதியுற்று வந்த 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். அவருக்கு MRI ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் 8 கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆபரேஷன் செய்தபோது பலியாகியுள்ளார். இதுகுறித்து சிகிச்சை அளித்த டாக்டர்கள், மாணவி சாப்பிட்ட உணவு வழியே முட்டைக்கோஸில் காணப்படும் ஒருவகையான ஒட்டுண்ணி மூளைக்குள் நுழைந்து, இந்த கட்டிகள் ஏற்பட்டிருக்கலாம் என்று விளக்கமளித்துள்ளனர்.

News January 1, 2026

100 கோடி இந்தியர்களின் கைகளில் ‘இணையம்’

image

இந்தியாவின் Broadband சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2025, நவம்பர் மாதத்தில் 100 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக TRAI தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 13 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, இன்று 100 கோடியாக வளர்ந்துள்ளது. இதில், ஜியோ 51 கோடி பயனர்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் 2-வது இடத்திலும் (31.42 கோடி), VI 3-வது இடத்திலும் (12.77 கோடி பேர்), BSNL 4-வது இடத்திலும் (2.94 கோடி பேர்) உள்ளது.

error: Content is protected !!