News April 16, 2025

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்

image

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.13 லட்சம் வெகுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

Similar News

News December 1, 2025

தி.மலை: தலைகுப்புற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

image

கலசபாக்கம் வட்டம் தென் பள்ளிப்பட்டு அருகே சாலையில் வாகனத்தை முந்த முயன்ற ஆந்திரா காரின் மீது மோதாமல் இருக்க ஒதுங்கிய அரசு பேருந்து நிலை தடுமாறி சாலை ஓரம் கவிழ்ந்தது. பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்ததால் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், பேருந்தை மீட்க வந்த கிரேனும் கவிழ்ந்ததால், கூடுதல் கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பேருந்தும் கிரேனும் மீட்கப்பட்டது.

News December 1, 2025

Sports 360°: கால்பந்தில் கலக்கும் இந்தியா

image

*U-17 ஆசிய கோப்பை கால்பந்து குவாலிஃபையர் போட்டியில் IND 2-1 என்ற கோல் கணக்கில் IRN-ஐ வீழ்த்தியது. *சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியின் இறுதிப்போட்டியில் பெல்ஜியத்திடம் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி. *ITTF யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் திவ்யான்ஷி வெண்கலம் வென்றார். *சையத் மோடி பேட்மிண்டன், மகளிர் இரட்டையரில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த் & த்ரிஷா ஜோலி இணை சாம்பியன்.

News December 1, 2025

டிட்வா புயல்.. இன்று கனமழை பொழியுமா?

image

டிட்வா புயல் கரையை கடக்காமல், கடலோரப்பகுதிகள் வழியாக சென்று வலுவிழந்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை அல்லது நெல்லூர் அருகே தாழ்வு மண்டலமாகவோ, தாழ்வுப்பகுதியாகவோ இன்று நிலைகொள்ள வாய்ப்புள்ளது. அவ்வாறு நிலைகொண்டால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழைக்கான சூழல் ஏற்படும். அதன் பிறகு மீண்டும் கிழக்கு திசை காற்று தமிழக பகுதிகளை நோக்கி வந்து, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!