News April 4, 2024
எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 பேர் உயிரிழப்பு

எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் திருவள்ளூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். சொந்த ஊருக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்த இருவரும், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இருவர் மீதும் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Similar News
News November 2, 2025
EXCLUSIVE: அதிமுகவுடன் கூட்டணி.. முடிவை அறிவித்தார்

அதிமுக கூட்டணியில், 2026 பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சியின்(AMAK) தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிவித்துள்ளார். WAY2NEWS-க்கு சிறப்பு பேட்டியளித்த அவர், 234 தொகுதிகளிலும் குறைந்தபட்சம் தலா 10,000 பேருடன் AMAK அபார வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். வரும் தேர்தலில் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதி (அ) சென்னை மதுரவாயலில் தான் போட்டியிட விரும்புவதாக கூறினார்.
News November 2, 2025
என்ன சொல்றீங்க.. இறந்துடுமா?

சில உயிரினங்கள் வாழ்நாள் மிகவும் குறுகிய காலம் மட்டுமே. குறிப்பாக சில பூச்சி வகைகள், மீன்கள், எலி வகைகள் உள்ளிட்டவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இறந்துவிடும். அவை எந்த உயிரினங்கள், எப்போது இறக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த உயிரினங்கள் தொடர்பான சுவாரசியமான தகவலை, கமெண்ட்ல சொல்லுங்க.
News November 2, 2025
ரஷ்மிகாவுக்கு கதையை பரிந்துரைத்த சமந்தா

ரஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘The Girlfriend’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் கதையை, தனது தோழியான நடிகை சமந்தாவிடம் படிக்க கொடுத்துள்ளார், இதன் இயக்குநர் ராகுல் ரவீந்திரன். அப்போது, இப்படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க ராகுல் திட்டமிட்டுள்ளார். ஆனால் சமந்தாவோ, இக்கதை தனக்கு பொருந்தாது, ரஷ்மிகாவை நடிக்க வையுங்கள் என கூறியுள்ளார். இதன் பிறகே ரஷ்மிகா படத்தில் கமிட்டாகியுள்ளார்.


