News March 21, 2024
+2 பொதுத்தேர்வு நாளையுடன் நிறைவு

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள், நாளையுடன் (மார்ச் 22) நிறைவடைகிறது. தேர்வுகள் எளிமையாக இருந்ததால் பலர் சதம் அடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நாளை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 6ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்.
Similar News
News November 2, 2025
அசுரவேகத்தில் முடி வளர மூலிகை எண்ணெய்!

➤உரலில் சடாமாஞ்சில் வேர், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை இடித்து கொள்ளவும் ➤கடாயில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் விட்டு, அரைத்த பொடியை போட்டு, பிரிங்கராஜ் தூளை சேர்க்கவும் ➤20 நிமிடங்கள் வறுத்து, எண்ணெய்யை வடிகட்டி கிளாஸ் பாட்டிலில் ஊற்றுங்கள் ➤வாரத்திற்கு 2 முறை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, மசாஜ் செய்துவர முடி உதிர்வு குறையும். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.
News November 2, 2025
இனிமேல் இங்கு சிகரெட் புடிக்க முடியாது!

தங்களது எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ, மாலத்தீவு அரசு வரலாற்று சிறப்புமிக்க முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 2007 ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள், புகையிலை பொருள்களை வாங்கவோ பயன்படுத்தவோ அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை இல்லா சமுதாயம் ஒன்றை படைக்கும் வகையில், எடுக்கப்பட்ட இம்முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் இது சாத்தியம் ஆகுமா?
News November 2, 2025
BREAKING: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

அமமுக இளைஞர் பாசறையின் மாநில இணைச் செயலாளர் D. ஆண்டனிராஜ் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். தென் சென்னையை சேர்ந்த அவர், அதிமுகவில் ஏற்பட்ட பிளவின்போது டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். அவருக்கு அமமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் EPS தலைமையில் ஆண்டனிராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து EPS வரவேற்றார்.


