News October 24, 2024

+2 மாணவியை கடத்திய பெண் கராத்தே மாஸ்டர்!

image

சென்னையில் 17 வயது + 2 மாணவி, இரு தினங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. போலீஸ் விசாரணையில் அந்த மாணவியுடன் அவரது கராத்தே மாஸ்டரான 27 வயது பெண், லெஸ்பியன் உறவில் இருந்ததும், திருமணம் செய்யும் நோக்கில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இந்நிலையில், அவர்களை தூத்துக்குடியில் மடக்கிய போலீஸார் மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். கராத்தே மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

அரவக்குறிச்சியில் ஏடிஎம் பாதுகாவலர் உயிரிழப்பு!

image

திண்டுக்கல், சின்னபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (51). இவர் அரவக்குறிச்சியில் தனியார் வங்கி ஏடிஎம் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வங்கி முன்பு பணியில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு மனைவிக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் அவரை அழைத்து அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்த்த போது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

News November 18, 2025

அரவக்குறிச்சியில் ஏடிஎம் பாதுகாவலர் உயிரிழப்பு!

image

திண்டுக்கல், சின்னபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (51). இவர் அரவக்குறிச்சியில் தனியார் வங்கி ஏடிஎம் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வங்கி முன்பு பணியில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு மனைவிக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் அவரை அழைத்து அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்த்த போது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

News November 18, 2025

அதிமுகவையும் திமுகதான் காப்பாற்றணும்: மருது அழகுராஜ்

image

எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இப்போது இல்லை என மருது அழகுராஜ் கூறியுள்ளார். இப்போதிருக்கும் அதிமுக சில சமூகங்கள் சேர்ந்த சாதி அமைப்பாக மாறிவிட்டது என்ற அவர், சகோதர இயக்கமான அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். இதனால்தான் அதிமுகவை விட்டு வந்துவிட்டோமே என்ற வருத்தம் தனக்கு துளியும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!