News May 8, 2025
+2 தேர்வு முடிவுகள்: மாநில அளவில் 2 பேர் முதலிடம்

+2 பொதுத்தேர்வில் 2 மாணவர்கள் மாநில அளவில் 599 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். அதேபோல், தாராபுரத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் மகன் ராகுல் என்பவரும் ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.
Similar News
News December 12, 2025
5 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இந்தியா!

SA-வுக்கு எதிரான 2-வது T20-ல் இந்திய அணி 5 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. 157-வது ரன்னில் ஜிதேஷ் சர்மா, 158-வது ரன்னில் துபே, 162-வது ரன்னில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி & திலக் வர்மா ஆகியோர் வரிசையாக அவுட்டாகினர். 213 ரன்களை சேசிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பமே முதலே தடுமாறியது. திலக் வர்மாவை தவிர, பேட்டிங்கில் அனைவருமே சொதப்பிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
News December 12, 2025
ரஜினியின் 2-வது தாயார்.. இவரை பற்றி தெரியுமா?

ரஜினி தாயாகவே பாவிப்பவரின் பெயர் ரெஜினா. 1979-ல் ரஜினி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்களாலும் அவரை கட்டுப்படுத்த முடியாத சூழலில், ‘அம்மா.. அம்மா’ என முனங்கியபடி அவர் தவித்துள்ளார். அப்போது, ரெஜினாவின் தாயன்பே அவரை குணப்படுத்தியுள்ளது. சமூக சேவகியான ரெஜினாவை ஷூட்டிங்கின் ஒன்றின் போது பார்த்த கணமே, ரஜினி அவரை ‘அம்மா’ என அழைத்துள்ளார். அன்றிலிந்து ரஜினிக்கு ரெஜினா 2-வது தாயாக மாறினார்.
News December 12, 2025
நிதிஷிடம் புதிய பஞ்சாயத்தை கூட்டும் லாலு மகள்!

லாலு பிரசாத்தின் மகள் <<18303650>>ரோகிணி ஆச்சார்யா<<>> குடும்ப சண்டை காரணமாக அரசியலை விட்டு விலகினார். இந்நிலையில், X பதிவில் நிதிஷ்குமாரின் மகளிர் திட்டங்களை சூசகமாக பாராட்டிய அவர், ‘ஒவ்வொரு மகளும் எந்தவித பயமும் இல்லாமல் பெற்றோர் வீட்டிற்கு பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது, குடும்ப பூசலின் உச்சமா? JDU-வில் இணைவதற்கான அச்சாரமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


