News May 8, 2025
+2 தேர்வு முடிவுகள்: மாநில அளவில் 2 பேர் முதலிடம்

+2 பொதுத்தேர்வில் 2 மாணவர்கள் மாநில அளவில் 599 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். அதேபோல், தாராபுரத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் மகன் ராகுல் என்பவரும் ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.
Similar News
News November 22, 2025
மழைக்கு மரியாதை கொடுங்க தம்பி: சீமான்

தண்ணீர் மாநாட்டை தொடர்ந்து, கடலம்மா மாநாட்டை நெல்லையில் சீமான் நடத்தினார். இதில் அவர் பேசிக்கொண்டிருந்த போது, மழை பெய்ய தொடங்கியதால், தொண்டர்கள் மழையில் நனையாமல் இருக்க சேர்களை தூக்கிப்பிடித்தனர். இதை கவனித்த சீமான், மழைக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கடா தம்பிகளா என கூறி, சேரினை இறக்க அறிவுறுத்தினார். கடலம்மாவை பேசும் போது மழை வரவில்லை என்றால், பிறகு கடலுக்கு என்ன மரியாதை என்றும் கூறினார்.
News November 22, 2025
காந்த கண்ணழகி கீர்த்தி சுரேஷ்

விஜய் உள்ளிட்ட உச்ச நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படம் மூலம் புதிய உயரத்தை தொட்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக உள்ள கீர்த்தியின் ‘ரிவால்வர் ரிட்டா’ படம் வரும் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் புரோமோஷனோடு சேர்த்து அவர் போட்ட புதிய போட்டோக்கள் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்திழுக்கிறது.
News November 22, 2025
சி.வி.ராமன் பொன்மொழிகள்

*அறிவியலின் அழகு, பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் திறனில் உள்ளது. *அறிவியலின் சாராம்சம் உபகரணங்கள் அல்ல, சுதந்திரமான சிந்தனை, கடின உழைப்பு. *ஆர்வம், கற்பனை மற்றும் விடாமுயற்சி ஆகிய மூன்று முனை அணுகுமுறையே அறிவியல் கண்டுபிடிப்புக்கான திறவுகோலாகும். *ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் தெரியாதவற்றில் ஆழமாக ஆராயும் ஆர்வத்தால் தொடங்குகிறது.


