News May 8, 2025
+2 தேர்வு முடிவுகள்: மாநில அளவில் 2 பேர் முதலிடம்

+2 பொதுத்தேர்வில் 2 மாணவர்கள் மாநில அளவில் 599 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். அதேபோல், தாராபுரத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் மகன் ராகுல் என்பவரும் ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.
Similar News
News November 16, 2025
EPS சிங்கம், பாஜக புலி: KT ராஜேந்திர பாலாஜி

சிங்கம்-புலி கூட்டணியாக ADMK – BJP கூட்டணி உள்ளதாக KT ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சிங்கமாக EPS-ம் புலியாக BJP-யும் உள்ளனர் என்ற அவர், EPS வீட்டை நோக்கி ஜனவரியில் எத்தனை கட்சி தலைவர்கள் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக என்ற கட்சியை சட்டமன்றத்திற்குள் நுழைய வைக்காமல் இருக்க தேவையான தேர்தல் உத்திகளை EPS மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
News November 16, 2025
ரஜினி வீட்டில் காலையிலேயே பரபரப்பு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் K.S.ரவிக்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுபாட்டு அறைக்கு பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, இருவரின் வீடுகளிலும் சோதனை செய்ய தேனாம்பேட்டை போலீசார் விரைந்தனர். ஆனால், <<18274391>>ரஜினி <<>>தரப்பில் சோதனை வேண்டாம் என மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் K.S.ரவிக்குமார் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
News November 16, 2025
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்: மோகன் பகவத்

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறுகிறார்கள் என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பெரும் பகுதியினர் இன்னும் பின் தங்கியே உள்ளனர். உலக மக்கள் தொகுதியில் வெறும் 4% பேர், 80% உலக வளங்களை பயன்படுத்துகின்றனர். வளங்கள் யாரிடமிருந்து எடுக்கப்படுகிறதோ, அவர்கள் முன்னேற்றத்தின் பலனை பெறுவதில்லை என கூறியுள்ளார்.


