News August 5, 2024
தூய்மை பணியால் 2 நாட்கள் பாபநாசம் சோதனை சாவடி மூடல்

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு கடந்த 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை 6-ஆம் தேதி மாலை 3 மணி வரை மட்டுமே தனியார் வாகனங்கள் பாபநாசம் வனசோதனை சாவடியை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும். 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கோவில் பகுதியில் தூய்மைப் பணிகள் நடைபெறுவதால் பாபநாசம் சோதனை சாவடி மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
நெல்லை: தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற..!

நெல்லை மக்களே; செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும்.தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணா பிறருக்கும் பயன்படும்.
News January 20, 2026
நெல்லை: இன்று இங்கெல்லாம் மின் தடை!

வள்ளியூர், கருங்குளம், திசையன்விளை, மேலப்பாளையம், விஜயாபதி, பாளை, ரெட்டியார்பட்டி ஆகிய இடங்களில் இன்று (ஜன 20) மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. செம்பாடு, கிழவனேரி, குமாரபுரம், சீலாத்தி குளம், இடையன்குடி, அப்புவிளை, கொட்டிகுளம், ஹமீபுரம், கூத்தன்குழி, உதயத்தூர், செங்குளம், புதுக்குளம், மகிழ்ச்சி நகர், திருநகர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் 9 – 2 மணி வரை ஒரு சில பகுதிகளில் 5 மணி வரை மின் தடை. *ஷேர்
News January 20, 2026
புதிய தொழில் பயிற்சி பள்ளி தொடங்க வாய்ப்பு – கலெக்டர்

நெல்லை கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2026 – 27ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்க அங்கீகாரம் புதுப்பித்தல் கூடுதல் தொழில் பிரிவு அலகுகள் துவங்குவதற்கு www.skilltraining.tn.gov.in என்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் பிப்.28. மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.


