News June 18, 2024
2 மரங்களுக்கு இடையே சிக்கிய பசு மீட்பு

முத்துப்பேட்டை, பெத்தவேளாண்கோட்டகம் பாமணி ஆற்றுக்கரை ஓரம் உள்ள 2 தேக்கு மரங்கள் இடையே ஒரு பசு மாடு தலையுடன் சிக்கிக் கொண்டு இரண்டு நாட்களாக உயிருக்கு போராடி தவித்து வந்தது. நேற்று இரவு இதைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த மக்கள் பசுவை மீட்டு அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த டாக்டர் மகேந்திரன் காயம் அடைந்த பசு மாட்டிற்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
Similar News
News September 9, 2025
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 9, 2025
திருவாரூர்: ஆசிரியர் வேலை – நாளையே கடைசி நாள்

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனே https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News September 9, 2025
உழவர் நலத்துறையின் சார்பில் சுற்றுலா

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அங்கக வேளாண்மை குறித்து அறியும் வகையில் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவினை இன்று (செப்.09) மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.