News April 15, 2024

2 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார்

image

இன்று தர்மபுரி பஸ் நிலையத்தில் கோவையை சேர்ந்த பிரித்வி 5 என்ற குழந்தை காணாமல் போனது. அதன் தாயார் டயானா அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ விஜய சங்கர் தலைமையில் டவுன் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சேலம் பஸ்ஸில் குழந்தை ஏறியது தெரிந்தது. உடனடியாக ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து மகளிர் போலீசார் மூலம் குழந்தையை மீட்டனர். 2 மணி நேரத்தில் மீட்ட போலீசாரை அனைவரும் பாராட்டினர்.

Similar News

News April 18, 2025

சமையல் உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

image

தர்மபுரியில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 21 – முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கணவரை இழந்த, கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 10ஆம் வகுப்பு படித்த, தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/ மாநகராட்சி/ நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். <>விண்ணப்பம்<<>>.

News April 18, 2025

பள்ளி மாணவி தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

image

பெண்ணாகரம் வட்டம், நாகமரை ஊராட்சி ஏமனூர் அருகே ஊ.ஒ.ந.நி பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவன் சுசீதரன் என்பவர் மாணவி அனிதாவை கடுமையாக தாக்கியதால் மண்டை உடைந்து முகத்தில் காயம் ஏற்பட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை செய்து வந்ததாகவும் மாணவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் பள்ளி மாணவி சார்பில் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

News April 18, 2025

பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வரும் ஏப்ரல் 25  அன்று காலை 09:00 மணிக்கு தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 2023, 2024, 2025 ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு டிப்ளமோ,பட்டப்படிப்பு படிப்பை முடித்த மாணவிகளுக்கு மட்டும்  பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!