News January 2, 2025

2 ஆண்டுகளில் 868 கஞ்சா வியாபாரிகள் கைது

image

தேனி மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் 2023ஆம் ஆண்டு 166 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 335 பேர். இதேபோல் 2024-ல் 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 533 பேர் என கடந்த 2 ஆண்டுகளில் 399 வழக்குகளில் 868 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 82 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News September 16, 2025

தேனி மாவட்டத்தில் வரைவு ஓட்டுசாவடி பட்டியல் வெளியீடு

image

தேர்தல் ஆணைய உத்தரவின் படி தேனி மாவட்டத்தில் 1200 வாக்காளர்களுக்கு உள்ள ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட 28 அமைவிடங்கள், 168 ஓட்டுசாவடிகள் அதிகரித்துள்ளன.மாவட்டத்தில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கும் பணி முடிந்துள்ளது.

News September 16, 2025

தேனி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

தேனி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் செய்து<<>> தென்காசி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவலுக்கு: 94987 94987 அழையுங்க.. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 16, 2025

தேனியில் 9 மாதங்களில் 49 பேர் மீது குண்டாஸ்

image

தேனி மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 49 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் ரேஷன் பொருட்கள் கடத்தி கைதானவர்கள், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் என 15 பேரும், கஞ்சா, போதை பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 27 பேர், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!