News April 26, 2024
2ம் கட்ட தண்ணீர் பந்தல் திறப்பு விழா அழைப்பு

திருச்சி அதிமுக மாஜி அமைச்சர்
மு.பரஞ்சோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் கோடைகால தண்ணீர் பந்தல் 2ம் கட்டமாக நாளை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியிலும், 28ம் தேதி மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியிலும், 29ம் தேதி துறையூர் சட்டமன்ற தொகுதியிலும், மே1ம் தேதி முசிறி சட்டமன்ற தொகுதியில் திறக்கப்பட உள்ளதால், இதில் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
திருச்சி: வெளிநாட்டவரை கைது செய்த போலீசார்

திருச்சி விமனாநிலையத்தில் இருந்து கடந்த 7ஆம் தேதி இலங்கை செல்லும் பயணிகளை குடியுரிமைப்பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது இலங்கை சேர்ந்த ராஜேஷ்கண்ணா(47) என்பவர் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதனையெடுத்து விமான நிலைய போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.
News March 9, 2026
‘நாங்கள் மட்டுமே ஆள்வோம்’: திருச்சியில் CM அதிரடி பேச்சு!

‘தமிழ்நாட்டை அதிமுக முகமூடி அணிந்து காவி கும்பல் கைப்பற்ற நினைக்கிறது. ஆனால் இந்த கருப்பு சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை அது நடக்காது. தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்காது. எப்பொழுதும் மக்களுக்காக களத்தில் நிற்கும் கட்சி திமுக. எங்கள் மண்ணை நாங்கள் மட்டும் தான் ஆள்வோம். தமிழ்நாடு எப்போதும் பாஜகவுக்கு ‘Out of Control’ தான்’ என்றார் அவர்.
News March 9, 2026
‘திருச்சி என்றாலே வெற்றி’: CM ஸ்டாலின் புகழாரம்

சிறுகனூரர் திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘திருச்சி தமிழகத்தின் மைய பகுதி மட்டும் அல்ல, இது கழகத்தின் மாநாட்டு பகுதி. திமுகவின் 12 மாநில மாநாடுகளில், மொத்தம் 7 மாநாடுகள் திருச்சியில் தான் நடந்துள்ளது. 1956 திருச்சி மாநாட்டில் தான் கழகம் தேர்தலில் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டது. திருச்சி என்றாலே திருப்பம், திருச்சி என்றாலே எழுச்சி, திருச்சி என்றாலே மகத்தான வெற்றி’ என்றார் அவர்.


