News November 17, 2024

2ஆவது நாள் வாக்காளர் சிறப்பு முகாம்

image

திண்டுக்கல்லில் வாக்காளர் சிறப்பு முகாம் 2ம் நாள் நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுசாவடிகளில் இன்று சிறப்பு முகாம்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

Similar News

News March 11, 2026

திண்டுக்கல்லில் துணிகர சம்பவம்!

image

வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் ஹோட்டல் உரிமையாளர் தொட்டியப்பனிடம் இருந்து 3 பவுன் தங்க நகை, 2 செல்போன்களை பறித்த வழக்கில் சேனன்கோட்டை சேர்ந்த பால்பாண்டி மற்றும் அவரது மகன்கள் சதீஷ்குமார், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க நகை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News March 11, 2026

பழனி அருகே உடல் கருகி பரிதாப பலி!

image

பழனி அருகே கணக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவமணி (80). இவர் வீட்டில் அவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அந்த வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தீயில் கருகி சிவமணி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பழனி ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 11, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 10) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தாங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!