News March 22, 2024
2ஆவது நாளில் வேட்பு மனுதாக்கல் இல்லை

கரூர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கரூர் மக்களவைத் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர் வழக்குரைஞர் நாகராஜன் என்பவர் மட்டும் முதல்நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 2-ம் நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
Similar News
News January 30, 2026
கரூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கரூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 30, 2026
கரூரில் சோகம்: வாலிபர் பலி

கரூர் கொக்காம்பட்டி டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் போர்டலி (23), பணியின்போது திடீரென ஏற்பட்ட வலிப்பால் மயங்கி விழுந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நிறுவன மேலாளர் மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
கரூர்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

கரூர் மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே<


