News November 5, 2024

2ஆவது நாளாக தொடரும் போக்குவரத்து நெரிசல்

image

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு நேற்று காலை சென்னைக்கு வரத்தொடங்கினா். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோா் சென்னைக்குள் வந்ததால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பரனூா் முதல் வீராபுரம் வரை சுமாா் 2 கி.மீ. தூரத்துக்கு 2ஆவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சென்னை திக்கு முக்காடி வருகிறது.

Similar News

News September 12, 2025

சென்னை தொழிலதிபரிடம் ரூ.22 கோடி மோசடி

image

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சுவேதரன்யன் (76) என்ற தொழிலதிபர் போலியான ஆன்லைன் தளத்தில் முதலீடு செய்து ரூ.22.30 கோடியை இழந்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருணை சந்தித்து கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், குஜராத், ஆமதாபாத்தைச் சேர்ந்த படேல் ஜே (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.

News September 12, 2025

சென்னையில் மினிபஸ் திட்டம் தோல்வி?

image

சென்னையில் தொடங்கப்பட்ட புதிய மினிபஸ் திட்டம், முறையான திட்டமிடல் இல்லாததால் முடங்கியுள்ளது. தகுதி சரிபார்க்காமல் குலுக்கல் முறையில் அனுமதி வழங்கப்பட்டதால், உரிமையாளர்கள் பழைய பேருந்துகளை தன்னிச்சையாக இயக்குகின்றனர். வழித்தடம், கால அட்டவணை குறித்த தகவல்கள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்‌.

News September 12, 2025

உத்தரவிட்டும் ஏன் கலைந்து செல்லவில்லை?- நீதிமன்றம் கேள்வி

image

தூய்மைபணியாளர்கள் போராட்டத்தின்போது நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி காவல்துறையினர் அத்துமீறியதாக தூய்மை பணியாளர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் அமைதியாக கலைந்து செல்லவில்லை என தூய்மை பணியாளர் தரப்புக்கு கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம், 3 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!