News April 6, 2025
2ஆம் வகுப்பு மாணவிக்கு டி.சி! அதிர்ச்சி சம்பவம்

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு மாணவி சரியாக படிக்கவில்லை என கூறி டி.சி பெற்றுக்கொள்கிறோம் என முத்திரைதாளில் எழுதி வாங்கிய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை மிரட்டி படிக்கவைக்க இத்தகைய செயலில் ஈடுபட்டதாக பள்ளி நிர்வாகம் கூறினாலும், இது மாணவியின் மனநிலையை பாதிக்கும் என பெற்றோர்கள் அச்சம். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 6, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்ரல்.6) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
News April 6, 2025
கோவை பரளிக்காடு சுற்றுலா!

கோவையில் காரமடையை அடுத்து பில்லூர் அணையை ஒட்டியுள்ள கிராமம் பரளிக்காடு. இங்கு வனத்துறையால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூழல் சுற்றுலா ஒருங்கிணைக்கப்படுகிறது. இங்கு அடர்ந்த காட்டுக்குள், பரிசல் பயணம், பழங்குடியினர் விருந்து, ஆற்றுக் குளியலை குடும்பத்துடன் அனுபவிக்க முடியும். இணைய வழியாக மட்டுமே இதற்கு முன்பதிவு செய்யப்படுகிறது. விடுமுறைக்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 6, 2025
கோவை: கடன் தொல்லையை நீக்கும் கால சம்ஹார பைரவர்!

பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் அமைந்துள்ளது ஆத்மநாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரரவ், சரபேஸ்வரர் அகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாளிக்கின்றனர். இங்குள்ள சக்திவாய்ந்த கால சம்ஹார பைரவரை, பூசணி தீபம், பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கிவிடுமாம். கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை Share பண்ணுங்க.