News December 21, 2024
2ஆம் திருமணம் செய்த மனைவிக்கு அரிவாள் வெட்டு

ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் கவுரி. இவருக்கும் வருசநாட்டைச் சேர்ந்த ஈஸ்வரனுக்கும் கடந்த 9 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். பின்னர் கவுரி 2ஆம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று மாலை தேனி க.விலக்கு மருத்துவமனைக்கு கவுரி வந்துள்ளார். அதனை பார்த்த ஈஸ்வரன் கவுரியை அரிவாளால் தாக்க முயன்றார். அதில் கவுரி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News November 12, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (11.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News November 11, 2025
தேனி: விஷ பூச்சியால் பறிபோன இளைஞர் உயிர்

உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (32). இவர் நேற்று முன்தினம் அவரது தோட்டத்தில் இருந்த பொழுது விஷப்பூச்சி ஒன்று அவரை கடித்துள்ளது. அவரை மீட்ட உறவினர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று (நவ.10) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News November 11, 2025
தேனி: மாடுகளுடன் தகாத உறவு.. ஒருவர் கைது

வருஷநாடு, சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் கர்ணன். நேற்று முன்தினம் இவரது மாட்டு கொட்டத்தில் இருந்த கேமராக்கள் திருடு போனது. கேமரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ததில் அப்பகுதியை சேர்ந்த ஜெகன்பாண்டி (22) மாடுகளுடன் தகாத உறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்து மாடுகளை துன்புறுத்தியதும் அதனை தொடர்ந்து கேமராவை திருடியதும் வீடியோவில் பதிவாகி இருந்தது. புகாரில் வருஷநாடு போலீசார் ஜெகன்பாண்டியை கைது (நவ. 10) செய்தனர்


