News March 29, 2025

193 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தையொட்டி நாகை மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நாளை (மார்ச்29) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், நீரின் முக்கியத்துவம், 2025-26ம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியம் நிதி பணிகள் தேர்வு பட்டியல் ஒப்புதல், முதலமைச்சரின் பழுதுற்றவீடுகள் மறுகட்டுமான திட்டம் குறித்து விவாதிக்கப்படும். ஆகவே இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 1, 2025

நாகையில் உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

image

நாகை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. அரசு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்கள் பங்கேற்று பயன்பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

News April 1, 2025

கடலில் மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது

image

மயிலாடுதுறை மாவட்டம் குட்டியாண்டியூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் லட்சுமணன், சந்தோஷ், நவலிங்கம் ஆகிய மூவரும் சனிக்கிழமை மதியம் கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு 12 நாட்டுக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்க வலை விரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது படகின் டிரைவர் லட்சுமணனை படகில் காணவில்லை. இந்த நிலையில் வேளாங்கண்ணி கடற்கரையில் கரை ஒதுங்கியது.

News April 1, 2025

வீட்டு வேலை பணியாளர்களுக்கு சிறப்பு முகாம்

image

நாகை மாவட்டத்தில் வீட்டு வேலையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்களை நல வாரியத்தில் சேர்க்கும் பொருட்டு நாகை மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வருகிற 15ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் வீட்டு வேலை பணியாளர்கள் பங்கேற்று பயன் பெறலாம் விவரங்களுக்கு 04365 252 204 என்ற எண்களில் தொடர்பு கொள்ள உதவி ஆணையர் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!