News March 29, 2025

193 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தையொட்டி நாகை மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நாளை (மார்ச்29) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், நீரின் முக்கியத்துவம், 2025-26ம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியம் நிதி பணிகள் தேர்வு பட்டியல் ஒப்புதல், முதலமைச்சரின் பழுதுற்றவீடுகள் மறுகட்டுமான திட்டம் குறித்து விவாதிக்கப்படும். ஆகவே இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 3, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் (நவ.02 ) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

நாகை: 1,00,162 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

image

நாகப்பட்டினம், 117 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கே.எம்.எஸ் 2025-2026 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் (03.09.2025) முதல் (01.11.2025) வரை 1,00,162 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய தினம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 3,297 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மாவட்ட முழுவதும் கொள்முதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News November 2, 2025

நாகை: பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை

image

நாகப்பட்டினம் மெய்கண்ட மூர்த்தி சுவாமி திருக்கோயிலின் மகா கும்பாபிசேகம் நாளை 3ஆம் தேதி நடக்கிறது. இதையடுத்து நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களை சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும், நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 8ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!