News June 18, 2024

சரத் பவார் அணிக்கு தாவும் 19 என்சிபி எம்எல்ஏக்கள்?

image

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் என்சிபியில் உள்ள 19 எம்எல்ஏக்கள் மழைக்காலக் கூட்டத் தொடருக்கு பின் சரத் பவார் அணிக்கு மாற உள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ.வும் சரத் பவாரின் பேரனுமான ரோஹித் பவார் கூறியுள்ளார். கடந்தாண்டு ஜூலையில் கட்சி பிளவுபட்டபோது, அஜித் பவாருடன் 40 எம்எல்ஏக்கள் சென்றனர். வரும் அக்டோபரில் அங்கு தேர்தல் வர உள்ள நிலையில், மீண்டும் அணி மாறும் படலம் இருக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News March 15, 2026

இவர்களுக்கு கேஸ் சிலிண்டர் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு

image

PNG(Piped Natural Gas) இணைப்புகளுடன் கூடிய வீடுகளுக்கு LPG சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. PNG வசதியை பயன்படுத்துவோர் தங்களது வீட்டு உபயோகத்திற்காக LPG சிலிண்டர்களை பெறுவது முறையல்ல என்றும், அப்படி பயன்படுத்தினால் LPG-யை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. TN-ல் சென்னை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 1.32 லட்சம் வீடுகள் PNG பயன்படுத்துகின்றன.

News March 15, 2026

CPI-க்கு 5 சீட்? இன்று இறுதி முடிவு

image

TN தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – CPI இன்று 4-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் CPI வெற்றிபெற்றது. இதனால், இந்த முறை 5 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என திமுக கூறுவதால் இழுபறி நீடித்து வருகிறது. எனினும், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில், தொகுதி உடன்படிக்கை எட்டப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 15, 2026

விஜய் தனித்து விடப்பட்டார்: சீமான்

image

ஆட்சியில் பங்கு தருகிறோம் என அழைத்தும் யாரும் வராததால் விஜய் தனித்து விடப்பட்டார் என்று சீமான் கூறியுள்ளார். கூட்டத்தோடு நிற்க யாருக்கும் வீரமோ, துணிவோ தேவையில்லை என்ற அவர், தாங்கள் (நாதக) வீரர்கள், எனவே தனித்து நிற்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தாங்கள் மக்களை முழுமையாக நம்புவதாகவும், அவர்கள் கட்சியையும் தலைவர்களையும் நம்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!