News April 29, 2025
19 வயது இளைஞர் தற்கொலை: குளித்தலை அருகே சோகம்!

குளித்தலை அருகே மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் அனில்குமார்(19). இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை குளித்தலை அருகே செல்லாண்டியம்மன் கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 29, 2025
Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும். கரூரில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.
News April 28, 2025
கரூர் காவல் நிலைய எண்கள்!

▶அனைத்து மகளிர் காவல் நிலையம், கரூர்: 04324-260505
▶காவல் நிலையம், அரவக்குறிச்சி: 04320-230026
▶காவல் நிலையம், கரூர்: 04324-217100
▶காவல் நிலையம், சிந்தாமணிப்பட்டி: 04323-251241
▶அனைத்து மகளிர் காவல் நிலையம், குளித்தலை: 04323-224200
▶காவல் நிலையம், க.பரமத்தி: 04324-283321
▶காவல் நிலையம், சின்னதாராபுரம்: 04324-232229
▶காவல் நிலையம், தென்னிலை: 04324-237227
நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 28, 2025
கோடை லீவுல செல்போன், ஐபிஎல்? ஜாக்கிரதை மக்களே!

கரூர்: கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் செல்போனிலும், இரவில் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் மூழ்கி உள்ளனர். இதனால் பார்வை குறைபாடு, ஞாபக மறதி, கவனச்சிதறல், படிப்பு மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பெற்றோர்கள் கண்காணித்து பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என கரூரை சேர்ந்த கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.