News April 29, 2025
19 வயது இளைஞர் தற்கொலை: குளித்தலை அருகே சோகம்!

குளித்தலை அருகே மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் அனில்குமார்(19). இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை குளித்தலை அருகே செல்லாண்டியம்மன் கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 29, 2025
கரூர் அரசு உதவித் திட்ட எண்கள்

▶️ உதவி திட்ட இயக்குநர்: 7373704218
▶️ செயற்பொறியாளர்: 7373704578
▶️ உதவித் திட்ட அலுவலர்(ஊதியம்&வேலைவாய்ப்பு) : 7402607682
▶️ உதவித் திட்ட அலுவலர்(வீடுகள்&சுகாதாரம்): 7402607681
▶️ உதவித் திட்ட அலுவலர்: 7402607679
▶️ கண்காணிப்பாளர்: 7402607688
▶️ வட்டார வளர்ச்சி அலுவலர்: 7402607715
News April 29, 2025
92 பயனாளிகளுக்கு ரூ.67,46, 387 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஈசநத்தத்தில் மக்கள் சந்திப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. ஈசநத்தம் ஊராட்சியில் உள்ள 25 குக் கிராமங்களுக்கு அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்துள்ளனர். மொத்தம் 92 பயனாளிகளுக்கு ரூ.67,46, 387 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
News April 29, 2025
கரூரில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது

கரூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மது விற்க உரிமம் பெற்ற ஓட்டல்களில் வரும் மே 1-ஆம் தேதி அன்று மே தினம் மற்றும் உழைப்பாளர் தினம் என்பதால் மது விற்பனை நடைபெறாது. மீறி யாரேனும் மதுவிற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.