News April 29, 2025
19 வயது இளைஞர் தற்கொலை: குளித்தலை அருகே சோகம்!

குளித்தலை அருகே மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் அனில்குமார்(19). இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை குளித்தலை அருகே செல்லாண்டியம்மன் கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
கரூர்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

கரூர் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx
மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 19, 2025
₹5,000 பரிசு: அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, டிச.2ல் பள்ளி, கல்லுாரி பேச்சு போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு, 5,000 ரூபாய்,- இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய்,- மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய்- வழங்கப்படும் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04324 – 255077 அழைக்கவும்.
News November 19, 2025
கரூரில் பாம்பு கடித்ததில் பெண் பலி!

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சென்னம்பட்டி பகுதியில் வசித்து வந்த வசந்தா என்பவர், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென பாம்பு கடித்தது. உடனடியாக, அவர் குளித்தலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


