News April 29, 2025

19 வயது இளைஞர் தற்கொலை: குளித்தலை அருகே சோகம்!

image

குளித்தலை அருகே மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் அனில்குமார்(19). இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை குளித்தலை அருகே செல்லாண்டியம்மன் கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

கரூர்: 4 வயது சிறுவன் கிணற்றில் விழ்ந்து பலி

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனின் நான்கு வயது மகன் சுஜன், நண்பர்களுடன் ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள திருப்பதி என்பவரின் விவசாய கிணற்றில் மீன்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது தவறிவிழ்ந்து உயிரிழந்தார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். நங்கவரம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வருகின்றனர்.

News December 6, 2025

கடவூரில் வசமாக சிக்கிய முதியவர்!

image

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சீத்தப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் செல்லதுரை (60). இவர் சீத்தப்பட்டி கடைவீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்று சிந்தாமணிப்பட்டி போலீசார் லாட்டரி சீட்டு விற்ற செல்லத்துரை மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.

News December 6, 2025

கரூர்: இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்

error: Content is protected !!