News November 24, 2024
19 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு

19 துணை தாசில்தார்களுக்கு தற்காலிகமாக தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, கோபி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் – தாலுகா அலுவலகம், பல்லாவரம் தனி வட்டாட்சியர் – நில எடுப்பு, சிறுசேரி, ஸ்ரீபெரும்புதுார், புத்தியப்பன் தலைமை உதவியாளர் – கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு மேற்பார்வையாளர் (டாஸ்மாக்) – தாம்பரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
Similar News
News September 18, 2025
செங்கல்பட்டு: பெரியாருக்கு முன்பே சமூக மாற்றம்

சாதிய முறைகளுக்கு எதிராக அம்பேத்கர், பெரியாருக்கு முன்பே சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர் இரட்டைமலை சீனிவாசன். 1860 ஜூலை 7ல் செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளத்தில் பிறந்து தமிழ்நாட்டில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம் பெற்ற முதல் தாழ்த்தபட்ட சமூக பிரதிநிதியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி ஆதிதிராவிட நலப்பள்ளிகள், விடுதிகள், உதவித்தொகை கிடைக்க செய்தார். இவரின் நினைவு தினம் இன்று.
News September 18, 2025
செங்கல்பட்டு: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

செங்கல்பட்டு மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.
News September 18, 2025
செங்கல்பட்டு: யூடியூபர் வராகி மீது 2 வழக்குகள் பதிவு

பிரபல யூடியூபர் வராகி, அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் தேரணிராஜன் மற்றும் நடிகர் விஷால் குறித்து தனது “(X)” தளத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததன் காரணமாக 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்தாண்டு செங்கல்பட்டு சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வாராகி மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.