News August 6, 2024
1,869 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி விதிமுறைகளை மீறி உரிய வரைபட அனுமதி இல்லாமல் 2 அடுக்கு 3 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள 1,869 கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று (ஆக.06) உத்தரவிட்டுள்ளது. விதிமீறி கட்டப்பட்ட கட்டட உரிமையாளர்கள் வரைபட அனுமதியை மாநகராட்சி வசம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
மதுரையில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

மதுரை மக்களே தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு<
News July 6, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

மின்மயமாக்கும் பணிக்காக, மதுரை – ராமேஸ்வரம் ரயில் சேவை ஜூலை 7 முதல் 31ஆம் தேதி வரை (சனி, ஞாயிறு மற்றும் ஜூலை 23, 24 தவிர) ரயில் சேவைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 56711 மதுரை-ராமேஸ்வரம், ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே பகுதியளவு ரத்து. (06714) ராமேஸ்வரம்-மதுரை, ராமேஸ்வரம்-ராமநாதபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் முன்னதாக திட்டமிடுமாறு வேண்டுகோள்.