News April 8, 2025
18 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள்.. அரசு தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் TN முழுவதும் 18,46,013 புது ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், மே 2021 முதல் மார்ச் 2025 வரை புது ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2017 முதல் ஆதார் மற்றும் செல்போன் எண்களின் பதிவு அடிப்படையில் மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்றதற்கு காரணம் இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதுதான் என கைஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். நம் வீரர்களுக்கு சரியான ஆதரவு கிடைக்காததால், அவர்கள் அனைவரும் பயத்திலேயே விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அணியை சரியாக வழிநடத்தவில்லை என சாடிய அவர், ஃபார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 18, 2025
இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்றதற்கு காரணம் இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதுதான் என கைஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். நம் வீரர்களுக்கு சரியான ஆதரவு கிடைக்காததால், அவர்கள் அனைவரும் பயத்திலேயே விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அணியை சரியாக வழிநடத்தவில்லை என சாடிய அவர், ஃபார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 18, 2025
ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் வேட்டை.. 31 பேர் கைது!

அண்டை மாநிலமான ஆந்திராவின் காக்கிநாடா, விஜயவாடாவில் 31 மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் இன்று மாவோயிஸ்ட்டுகளின் முக்கிய தளபதி உள்ளிட்ட <<18318822>>6 பேர் என்கவுண்டர்<<>> செய்யப்பட்டனர். மேலும், தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


