News March 20, 2024
பிப்ரவரியில் ரூ.18.2 லட்சம் கோடி யுபிஐ பரிவர்த்தனை

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.18.2 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ரொக்கமாக பணத்தை எடுத்து செல்ல விரும்பாதோர், யுபிஐ வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் 122 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் ரூ.18.2 லட்சம் கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் ரூ.40,000 கோடி முதல் ரூ.80,000 கோடி வரை பரிவர்த்தனை நடந்துள்ளது.
Similar News
News November 15, 2025
BREAKING: விலை ₹5,000 குறைந்தது

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் மளமளவென்று குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹5 குறைந்து ₹175-க்கும், கிலோ வெள்ளி ₹5,000 குறைந்து ₹1,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹3,000, இன்று ₹5,000 என 2 நாளில் வெள்ளி விலை மொத்தம் ₹8,000 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வரும் நாள்களிலும் வெள்ளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News November 15, 2025
பிஹார் வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு: வேல்முருகன்

உண்மையான பிஹார் மக்கள் ஓட்டுப்போட்டா பாஜகவினர் வெற்றி பெற்றார்கள் என தவாக வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியலில் என்ன தில்லுமுல்லு நடந்திருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும் என்ற அவர், இதையே TN-லும் செய்ய பாஜக திட்டமிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், TN-ல் உள்ள வட இந்தியர்களுக்கு Voter ID கொடுத்ததன் மூலம், பகுத்தறிவாளிகள் வெல்ல முடியாத சூழல் உருவாகும் எனவும் கூறினார்.
News November 15, 2025
ECI திருடனாக மாறிவிட்டது: ஆ.ராசா

பிஹாரில் NDA கூட்டணியின் வெற்றிக்கு, ECI-யின் SIR பணிகள் மறைமுகமாக உதவியதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், SIR மூலம் ECI திருடனாக மாறிவிட்டது என்று MP ஆ.ராசா விமர்சித்துள்ளார். ECI-ஐ திருடர்களிடம் இருந்து பாதுகாக்க, ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


