News March 20, 2024

பிப்ரவரியில் ரூ.18.2 லட்சம் கோடி யுபிஐ பரிவர்த்தனை

image

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.18.2 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ரொக்கமாக பணத்தை எடுத்து செல்ல விரும்பாதோர், யுபிஐ வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் 122 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் ரூ.18.2 லட்சம் கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் ரூ.40,000 கோடி முதல் ரூ.80,000 கோடி வரை பரிவர்த்தனை நடந்துள்ளது.

Similar News

News November 16, 2025

புயல் சின்னம்: கனமழை வெளுத்து வாங்கும்

image

வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், இன்று விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. நாளை 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், விழுப்புரத்திலும், நாளை மறுநாள் தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News November 16, 2025

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்

image

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு போன் மூலம் இன்று காலை <<18301754>>வெடிகுண்டு மிரட்டல்<<>> விடுத்த பெண் சிக்கினார். அவர் சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த 34 வயதான ராதா என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ராதாவை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல ஹாஸ்பிடலில் அவரை சேர்க்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.

News November 16, 2025

கூட்டணி பேச்சு: விஜய் கட்சி அதிகாரப்பூர்வ விளக்கம்

image

ராகுலுடன் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தவெக நிர்வாகி அருண்ராஜ் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். ராகுலுடன் விஜய் பேசியதாக வெளியாகும் செய்தி வதந்தி எனக்கூறிய அவர், இதை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், கூட்டணி தொடர்பாக விஜய் அனைத்து முடிவையும் எடுப்பார் என்றும் யாருடன் கூட்டணி என்பதில் நாங்கள் (பாஜக, திமுகவை தவிர) தெளிவாக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!