News March 20, 2024
பிப்ரவரியில் ரூ.18.2 லட்சம் கோடி யுபிஐ பரிவர்த்தனை

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.18.2 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ரொக்கமாக பணத்தை எடுத்து செல்ல விரும்பாதோர், யுபிஐ வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் 122 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் ரூ.18.2 லட்சம் கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் ரூ.40,000 கோடி முதல் ரூ.80,000 கோடி வரை பரிவர்த்தனை நடந்துள்ளது.
Similar News
News December 6, 2025
அகண்டா 2 ரிலீஸ் ஆகாததற்கு இதுதான் காரணமா?

பாலையா ஃபேன்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்த அகண்டா 2 வெளியாகவில்லை. இப்படத்தை தயாரித்த 14 ரீல்ஸ் நிறுவனம், முந்தைய பட தயாரிப்புகள் காரணமாக ஈரோஸ் நிறுவனத்துக்கு ₹28 கோடி செலுத்த வேண்டும் என பேசப்படுகிறது. இதை கொடுக்காததால் படத்தை தடைசெய்யக்கோரி ஈரோஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்னையை தீர்த்து வருவதாக 14 ரீல்ஸ் கூறியதால், படம் டிச.20-க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 6, 2025
முருகரும் ராமரும் எங்கள் பக்கம் தான்: RS பாரதி

பார்லிமெண்ட்டில் திருப்பரங்குன்றம் விவகாரம் மீதான விவாதத்தில் எல்.முருகன், தமிழக அரசை விமர்சித்திருந்தார். இந்நிலையில், முருகன் என்று பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் முருகன் ஆகிவிட முடியாது என RS பாரதி விமர்சித்துள்ளார். மேலும் அறுபடை வீடுகள் உள்ள தொகுதிகளில் எல்லாம் திமுக தான் வெற்றி பெற்றது என்ற அவர், முருகனும் எங்கள் பக்கம் தான், ராமரும் எங்கள் பக்கம் தான் என கூறினார்.
News December 6, 2025
திடீர் கோடீஸ்வரர் அண்ணாமலை? சாடும் CPM

கர்நாடகா, TN-ல் பல ஏக்கர் நிலங்களை அண்ணாமலை வாங்கி குவித்துள்ளதாக CPM மாநில செயலர் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டிள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை, 246 ஆடம்பர மாளிகைகளை விற்பதற்காக காட்டுவதாகும், அவற்றின் மதிப்பு தலா ₹9 கோடி என்றும் தெரிவித்துள்ளார். இப்படி திடீர் கோடீஸ்வரரான ரகசியத்தை அவர் விளக்கி, தான் ஒரு கிளீன் மேன் என்பதை நிரூபிக்க வேண்டும் என பெ.சண்முகம் கூறியுள்ளார்.


