News March 20, 2024

பிப்ரவரியில் ரூ.18.2 லட்சம் கோடி யுபிஐ பரிவர்த்தனை

image

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.18.2 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ரொக்கமாக பணத்தை எடுத்து செல்ல விரும்பாதோர், யுபிஐ வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் 122 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் ரூ.18.2 லட்சம் கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் ரூ.40,000 கோடி முதல் ரூ.80,000 கோடி வரை பரிவர்த்தனை நடந்துள்ளது.

Similar News

News November 5, 2025

விலை மொத்தம் ₹5000 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹163-க்கும், கிலோ வெள்ளி ₹2000 குறைந்து ₹1,63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹3000, இன்று ₹2000 என 2 நாளில் மொத்தம் ₹5000 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை சரிந்துள்ளதால், வரும் நாள்களில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 5, 2025

கோவை மாணவியை மீட்க தாமதம் ஏன்?: EPS

image

கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை 100 போலீஸ் தேடியும் மீட்க நான்கரை மணி நேரம் ஆனது ஏன் என EPS கேட்டுள்ளார். குற்றவாளிகளை பிடித்ததாக CM தம்பட்டம் அடித்துக்கொள்வதாக கூறிய அவர், மாணவியை மீட்க ஏற்பட்ட தாமதத்திற்கு தலைகுனிய வேண்டும் என்றார். மேலும், இருட்டான இடம் என்பதால் தாமதம் ஏற்பட்டது என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும் என கடுமையாக சாடியுள்ளார்.

News November 5, 2025

ஹைட்ரோஜென் குண்டை வீசவுள்ள ராகுல் காந்தி

image

டெல்லியில் இன்று பகல் 12 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.
வாக்குத் திருட்டு தொடர்பான ‘ஹைட்ரஜன் குண்டை’ விரைவில் வெளியிட உள்ளதாக கடந்த செப்டம்பரில் ராகுல் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள பிரெஸ்மீட் இதுதொடர்பானது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் குற்றம்சாட்டியிருந்தார்.

error: Content is protected !!