News November 15, 2024

18-ம் நூற்றாண்டு செப்பேடு கண்டெடுப்பு

image

கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வருசநாடு செல்வம் மற்றும் தொல்லியியல் ஆய்வாளர் காந்திராஜன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள சவுடம்மன் கோவிலில் 18-ம் நூற்றாண்டைச் சார்ந்த 2 செப்பேடுகள் இருப்பதை கண்டறிந்தனர். அவர்கள் கூறும் போது:- ஒரு செப்பேட்டில் பணத்திற்கு மோதல் மற்றொரு செப்பேடில் அண்ணன் -தம்பி பிரச்சனை என்றார்.

Similar News

News November 11, 2025

தேனி; G.H-ல் வேலை ரெடி! 8th தகுதி.. APPLY NOW

image

தேனி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் ஆண்டிபட்டி , கம்பம் , போடி உள்ளிட்ட மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 78 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8th முதல் D.Pharm, நர்சிங் படித்தவர்கள் இப்பணிகளுக்கு 24.11.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம்: ரூ.8,950 – ரூ.60,000. <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை நிரப்பி தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு நேரிலோ, தபால் மூலமோ அனுப்பலாம். SHARE

News November 11, 2025

தேனி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கம்பம் பகுதியில் தற்போது முதல் போக நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு 2.ம் போகத்திற்கு என்.எல்.ஆர். என்ற ரகம் சாகுபடி செய்யப்பட்டது. தற்போதும் விவசாயிகள் அந்த ரகத்தை விரும்புகின்றனர். எனவே, என்.எல்.ஆர். மற்றும் ஆடுதுறை 54, கோ 55 ரக விதை நெல் 33 டன் வரை இருப்பு உள்ளது. விரும்பும் விவசாயிகள் கம்பம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

News November 10, 2025

தேனி: டூவீலரில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

image

பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (75). இவர் நேற்று (நவ.9) அவரது பேரனின் பைக்கில் பின்னால் அமர்ந்து பெரியகுளம் சாலையில் சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்த காளியம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!