News April 27, 2025

170 சீட் உறுதி.. வியூகம் வகுக்கும் இபிஎஸ்!

image

2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் இபிஎஸ் தெளிவாக உள்ளார். எனவே, 170-க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும் என அவர் நினைக்கிறார். அதனால் தான், ADMK 150, BJP 40, பிற கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் என்ற பாஜகவின் கணக்கிற்கு அவர் உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த முறை ஆட்சியை பிடிப்பதில் அவர் உறுதியாக உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

Similar News

News January 10, 2026

‘TAPS’.. புதிய மொந்தையில் பழைய கள்: EPS விளாசல்

image

மத்திய அரசின் UPS-யை பெயர் மாற்றம் செய்து <<18749969>>அறிவிக்கப்பட்டுள்ள TAPS<<>>, ஒரு ஏமாற்றும் திட்டம் என EPS விமர்சித்துள்ளார். இதனை, ‘புதிய மொந்தையில் பழைய கள்’ எனவும் சாடியுள்ளார். அத்துடன், பழைய பென்ஷன் திட்டத்தின் முக்கிய அம்சமான ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் அவ்வப்போது பென்ஷனை உயர்த்தி மறுநிர்ணயம் செய்யும் பரிந்துரை TAPS-ல் இல்லை எனவும், 10% சம்பளம் பிடித்தம் ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 10, 2026

மத்திய அரசின் முடிவை வரவேற்று PM-க்கு CM கடிதம்

image

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் இதை மிகுந்த கவனத்தோடு செயல்படுத்த மாநில CM-க்கள், பிரதிநிதிகள் குழுவை அமைக்க வலியுறுத்திய அவர், சமூக இயக்கவியல், சாதிய கட்டமைப்பு வேறுபாடுகளை கவனத்தோடு கையாளவில்லை என்றால், சமூக பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

News January 10, 2026

‘நான் சாகப் போறேன்.. என் சாவுக்கு காரணம் இதுதான்’

image

‘எனது தற்கொலை எண்ணங்களை வெல்வேன் என நினைத்தேன். ஆனால், அதில் தோல்வி அடைந்துவிட்டேன். இந்த வேலை எனக்கு கடினமாக இருக்கிறது’. டெல்லி சாகேத் மாவட்ட கோர்ட்டில் எழுத்தாளராக பணியாற்றிய ஹரிஷ் சிங் மஹரின் கடைசி வரிகள் இவை. 60% மாற்றுத் திறனாளியான அவர், வேலையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் சோக முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள்!

error: Content is protected !!