News April 27, 2025
170 சீட் உறுதி.. வியூகம் வகுக்கும் இபிஎஸ்!

2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் இபிஎஸ் தெளிவாக உள்ளார். எனவே, 170-க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும் என அவர் நினைக்கிறார். அதனால் தான், ADMK 150, BJP 40, பிற கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் என்ற பாஜகவின் கணக்கிற்கு அவர் உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த முறை ஆட்சியை பிடிப்பதில் அவர் உறுதியாக உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
Similar News
News January 16, 2026
சற்றுமுன்: செங்கோட்டையன் தரப்பு அதிர்ச்சி

தவெகவில் விஜய், புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்த இடத்தில் செங்கோட்டையன் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் பொது மேடைகளில் பேசி வருகின்றனர். ஆனால், சற்றுமுன் <<18871253>>விஜய் வெளியிட்ட பிரசார பணிக்குழுவில்<<>> செங்கோட்டையன் பெயர் ஆதவ் அர்ஜுனாவின் பெயருக்கு அடுத்ததாக இடம் பெற்றது சர்ச்சையாகியுள்ளது. பிரசார கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கே வழிகாட்டியவரை மட்டுப்படுத்துகிறாரா விஜய் என ஒருசாரார் கேள்வி எழுப்புகின்றனர். உங்கள் கருத்து?
News January 16, 2026
திமுக அரசின் கொள்ளைத் திட்டம்: அன்புமணி

1553 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ₹9.50 வரை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது மின்வாரியத்திற்கு இழப்பையே ஏற்படுத்தும். எனவே, சந்தை சராசரி விலையை கணக்கிட்டு, அதற்கும் குறைவான விலையிலேயே மின்சாரத்தையும் வாங்க ஆணையிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
News January 16, 2026
சனாதன தர்மத்தில் வேரூன்றி நிற்கும் திருவள்ளுவர்: R.N.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, கவர்னர் RN ரவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவரது X-ல், வள்ளுவரின் ஆழமான ஞானம், பல நூற்றாண்டுகளாக பாரதத்தின் தார்மீக மற்றும் ஆன்மிக உணர்வுகளை வடிவமைத்துள்ளது. பாரதிய பாரம்பரியத்தின் காலத்தால் அழியாத தமிழ் பொக்கிஷமான திருக்குறள், சனாதன தர்மத்தின் நித்திய நெறிமுறைகளில் திடமாக வேரூன்றி, காலம் கடந்து நிற்கிறது என்று கூறியுள்ளார்.


