News November 1, 2025

17 துணை வட்டாட்சியர்கள் அதிரடி பணியிடை மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 துணை வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மற்றும் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அக்டோபர் 31-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருக்கோவிலூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக கங்காலட்சுமி என்பவரும், வாணாபுரம் தேர்தல் துணை வட்டாட்சியராக சதீஷ்குமார் என 17 துணை வட்டாட்சியர்கள் பணியிடை மற்றும் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News November 1, 2025

மாணவர்களுக்கு பாடம் எடுத்த முதன்மை கல்வி அலுவலர்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கல்வி வட்டாரத்துக்கு உட்பட்ட வேங்கைபாடி கிராமத்தில் அமைந்திருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (நவ.1) கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்.

News November 1, 2025

கள்ளக்குறிச்சி: தந்தை திட்டியதால் விஷம் அருந்தி மாணவி தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் அருகே காரனூர் சேர்ந்த மணிவண்ணன் மகள் மோனிஷா சின்னசேலம் அருகே தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் 1ம் ஆண்டு படித்து வருகிறார். இன்று (நவ.1) மோனிஷா வீட்டு வேலைகளை செய்யவில்லை என அவருடைய தந்தை திட்டியுள்ளார். இதனால், மோனிஷா வீட்டில் இருந்த விஷயத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 1, 2025

கள்ளக்குறிச்சி: போதைப் பொருட்கள் விற்றவர் கைது!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த வரதப்பனுார் கிராமத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று (அக்.31) போலீசார் அந்த கிராமத்தில் சோதனையில் ஈடுபட்ட போது, அதே கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது பெட்டிக் கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

error: Content is protected !!