News October 24, 2024
தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. இலங்கை அடாவடி

தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி வந்து கடலில் மீன்பிடித்ததாக கூறி 16 பேரை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளது.
Similar News
News November 21, 2025
‘சிக்கன் 65’ பெயர் வந்தது எப்படி தெரியுமா?

அசைவ பிரியர்களின் விருப்பமான உணவு ‘சிக்கன் 65’. அதை விரும்பி சாப்பிடும் பலருக்கும் அதன் பெயர் காரணம் தெரியாது. உண்மையில் இந்த பெயர் வந்தது தமிழகத்தில் இருந்து தான். 1965-ல் சென்னை புஹாரி ஹோட்டல் உரிமையாளர் AM புஹாரி தான், இதை முதலில் அறிமுகப்படுத்தினார். மசாலாவில் ஊறவைத்து பொறித்த கோழிக்கறியை புதிய டிஷ் ஆக அறிமுகம் செய்த அவர், அந்த ஆண்டை வைத்து ‘சிக்கன் 65’ என்று குறிப்பிட அது பிரபலமாகிவிட்டது.
News November 21, 2025
ஆப்கன் எல்லையில் பாக்., தாக்குதல்: 23 பேர் பலி

PAK-AFG இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஆப்கன் எல்லைக்கு அருகே இரண்டு தனித்தனி தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது. குர்ரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட TTP குழுவை சேர்ந்தவர்கள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது.
News November 21, 2025
குளிர்காலத்தில் இத கண்டிப்பா சாப்பிடுங்க!

குளிர்காலத்தில் உடல் மந்தமாக இருக்கும். எனவே, ஆற்றலை அதிகரிக்க சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அதில் முக்கியமான ஒன்று வேர்க்கடலை என்கின்றனர் டாக்டர்கள் *இதில், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. *குடலுக்கு நல்லது. *எலும்புகளை வலுப்படுத்துகிறது. *கொலஸ்ட்ரால், சுகர் அளவை கட்டுப்படுத்தும். *சரும பாதுகாப்பு, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.


