News October 24, 2024
தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. இலங்கை அடாவடி

தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி வந்து கடலில் மீன்பிடித்ததாக கூறி 16 பேரை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளது.
Similar News
News November 24, 2025
இனி ரயிலில் பர்த்டே கொண்டாடலாம்!

உங்கள் பிறந்தநாள், ப்ரீ வெட்டிங் ஷூட் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இனி ரயிலில் நடத்தலாம். நமோ பாரத் ரயில்களில் 1 மணி நேரத்திற்கு ₹5,000 செலுத்தி, உங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளை வித்தியாசமாக கொண்டாடலாம். தேவையான அலங்காரங்களும் செய்துகொள்ளலாம். அலங்காரம் செய்வதற்கும், விழா முடிந்த பிறகு அலங்காரத்தை நீக்கவும் 30 நிமிடங்கள் வழங்கப்படுமாம். இதற்காக NCRTC தளம் (அ) நேரடியாக ரயில் நிலையங்களில் புக் செய்யலாம்.
News November 24, 2025
இன்று புதிய தலைமை நீதிபதி பதவியேற்கிறார்

இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக (CJI) சூர்யகாந்த் இன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதில் பூடான், கென்யா, மலேசியா, மொரிசியஸ், இலங்கை, நேபாள் தலைமை நீதிபதிகள் பங்கேற்க உள்ளனர். CJI பதவியேற்பு விழாவில் வெளிநாட்டினர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். அதேபோல், ஹரியானாவிலிருந்து பதவியேற்கும் முதல் CJI சூர்யகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
BREAKING: 14 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை.. முழு விபரம்

கனமழை எதிரொலியால் இதுவரை 14 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தென்காசி, நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


