News October 24, 2024
தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. இலங்கை அடாவடி

தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி வந்து கடலில் மீன்பிடித்ததாக கூறி 16 பேரை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளது.
Similar News
News November 28, 2025
செங்கோட்டையன் சென்ற விமானத்தில் கோளாறு.. பதற்றம்

சென்னையில் இருந்து செங்கோட்டையன் சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. கோவைக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் திடீரென சிக்னல் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து, அந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர், விமானம் மீண்டும் கோவைக்கு புறப்பட உள்ளது.
News November 28, 2025
வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. ஸ்டாலின் அறிவிப்பு

டிட்வா புயலையொட்டி, முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்பட மாவட்ட கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்திய அவர், பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு 16 SDRF மற்றும் 12 NDRF படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News November 28, 2025
இந்த முக்கிய மாற்றங்கள் டிசம்பரில் அமலுக்கு வருகிறதா?

➤டிச.1 முதல் உங்கள் ஆதாரில் பெயர், போன் நம்பர் நீக்கப்பட்டு, வெறும் போட்டோ, QR Code மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது ➤அனைத்து விதமான AutoPay வசதியும் ஒரே UPI APP-ன் கீழ் கொண்டுவரப்படும். சில பரிவர்த்தனைகளுக்கு biometric கட்டாயமாக்கப்படலாம் ➤SBI வங்கியின் mCash சேவை டிசம்பர் 1 முதல் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது ➤டிச.1 அன்று சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


