News October 24, 2024
தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. இலங்கை அடாவடி

தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி வந்து கடலில் மீன்பிடித்ததாக கூறி 16 பேரை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளது.
Similar News
News November 17, 2025
CINEMA 360°: நாய்க்குட்டிக்கு பிறந்தாள் கொண்டாடிய திரிஷா

*டாப் ஸ்டார் பிரசாந்த் சினிமாவில் 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். *தனது நாய்க்குட்டிக்கு நடிகை திரிஷா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். *வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த நிலையில் தற்போது படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழை கிடைத்துள்ளது. *புதுமுகங்கள் நடித்துள்ள ‘பஞ்சாயத்து’ வெப் சீரிஸ் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.
News November 17, 2025
காமராஜர் பொன்மொழிகள்

*உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம். *சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல, பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை. *எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத்தான் செய்யும். *சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான்.
News November 17, 2025
SIR பணியில் இருந்த BLO தற்கொலை: வேலை அழுத்தமா?

கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் SIR பணியில் இருந்த BLO அனீஷ் ஜார்ஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். SIR பணி அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 3 முக்கிய அமைப்புகள் BLO பணியை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.


