News October 24, 2024

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. இலங்கை அடாவடி

image

தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி வந்து கடலில் மீன்பிடித்ததாக கூறி 16 பேரை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளது.

Similar News

News November 27, 2025

தி.மலை: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

image

தி.மலை மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

பிரபல தமிழ் நடிகைக்கு 2-வது திருமணம் ❤️(PHOTOS)

image

பிரபல தமிழ் நடிகை சம்யுக்தாவிற்கு கிரிக்கெட்டர் அனிருதா ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சம்யுக்தா ஷான், விஜய்யுடன் வாரிசு, விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார். அனிருதா ஸ்ரீகாந்த் 2008- 15 வரை IPL-ல் விளையாடியுள்ளார். இவர்களது திருமணத்திற்கு திரைத்துறையினர் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News November 27, 2025

செங்கோட்டையன் குறித்த கேள்வியால் டென்ஷனான EPS

image

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘அதை அவரிடம் போய் கேளுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்; அதிமுகவில் இல்லாத ஒருவர் குறித்து பதிலளிக்க முடியாது’ என்று இபிஎஸ் ஆவேசமாக பதிலளித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. இதனால், கொங்குவில் கட்சியை பலப்படுத்த இபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.

error: Content is protected !!