News October 24, 2024
தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. இலங்கை அடாவடி

தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி வந்து கடலில் மீன்பிடித்ததாக கூறி 16 பேரை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளது.
Similar News
News December 3, 2025
விஜய் பாஜக கூட்டணியில் இணைகிறாரா? புது அப்டேட்

செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததே, அக்கட்சியை NDA கூட்டணியில் இணைப்பதற்குதான் என திமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய், அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, யார் யாரை எப்போது சந்திக்க வேண்டும் என்பதில் டெல்லி தலைவர்கள் சரியாக இருப்பார்கள் என சூசகமாக பதிலளித்துள்ளார். NDA கூட்டணியில் தவெக இணையுமா?
News December 3, 2025
TNPSC Annual Planner 2026 வெளியானது!

2026-ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது. இதன்படி, குரூப் 1 – செப்.6, குரூப் 2/ 2A – அக்.25, குரூப் 4 – டிச.20, தொழில்நுட்பத் தேர்வு (நேர்காணல்) – நவ.14, நேர்காணல் இல்லாதது – ஆக.3, டிப்ளமோ/ ஐடிஐ அளவிலான தொழில்நுட்பத் தேர்வு – செப்.20 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வருவதால், அனைத்து தேர்வுகளும் ஜூலைக்கு பிறகே தொடங்குகிறது. SHARE IT.
News December 3, 2025
கேஸ் மாஸ்க் உடன் Entry கொடுத்த MP-க்கள்

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இதனை வலியுறுத்தும் வகையில் எதிர்க்கட்சி MP-க்கள் கேஸ் மாஸ்க் உடன் நாடாளுமன்றத்துக்கு சென்றனர். காற்றுமாசுபாடு விவகாரத்தில் PM மோடி தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


