News October 24, 2024

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. இலங்கை அடாவடி

image

தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது மீனவ கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் 2 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி வந்து கடலில் மீன்பிடித்ததாக கூறி 16 பேரை கைது செய்து, 2 படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளது.

Similar News

News December 5, 2025

அறிவித்தார் திருவள்ளூர் கலெக்டர்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தின் கீழ் தற்காலிக தூய்மைப்பணியாளர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. விவரங்களுக்கு 9445029475 மற்றும் 044-27665539 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 5, 2025

அது நில அளவைக் கல், தீபத்தூண் அல்ல: கனிமொழி

image

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற பாஜகவினர் முயற்சிக்கின்றனர் என கனிமொழி சாடியுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்லில் தீபமேற்ற சொல்கிறார்கள் என குறிப்பிட்ட அவர், மதநல்லிணக்க சூழலை சீர்கெடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், 2014-ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்ட படியே வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது என தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

BREAKING: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

சென்னையில் நாளை (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று பிற மாவட்டங்களுக்கும் அறிவிப்பு வெளியாகலாம்.

error: Content is protected !!