News April 2, 2024

16 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்.

image

பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் நேற்று (ஏப்.1) ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வடுகபட்டி பகவதி அம்மன் கோவில் தெருவில் நின்று கொண்டிருந்த ராஜ்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 15, 2025

தேனி : ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள்

image

தேனியில் பெண்களுக்கென மகளிர் காவல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களிடையே மகளிர் காவல் நிலைய எண்கள் இருப்பதில்லை.
▶️ஆண்டிபட்டி – 04546-244431.
▶️தேனி – 0456-254090.
▶️ உத்தமபாளையம் -0456-268230.
▶️ போடி – 0456 – 285700.
இப்பவே உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யவும். ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு கண்டிப்பாக இது உதவும் .

News August 15, 2025

தேனியில் ஒரு தியாகி வரலாறு

image

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் ஏப்ரல் 14, 1913ம் ஆண்டில் பிறந்தவர் N.R தியாகராஜன். காமராஜர் மற்றும் ராஜாஜி உடன் நெருங்கிய நண்பராக இருந்தவர்.இவர் நினைவைப் போற்றும் வகையில் தேனியில் பல இடங்களில் அவரது பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன. இவர் ஏப்ரல் 27, 1969-ல் காலமானார். உங்க ஊர் தியாகியை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க. இவர் உங்க ஊர் பெருமை.

News August 14, 2025

தேனி: டிகிரி முடித்தால் ரூ.93,000 த்தில் அரசு வேலை

image

தேனி மக்களே, மத்திய அரசின் கீழ் இயங்கும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் Generalist Officer பணிக்கு 500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி அல்லது CA முடித்தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து, 13.08.2025 முதல் 30.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை, வேலை தேடும் உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

error: Content is protected !!