News March 28, 2024
16 வயது சிறுமிக்கு மிரட்டல் போக்சோ சட்டத்தில் கைது

அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். காதலிக்க மறுத்தால் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை தவறாக பதிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 8, 2025
அரியலூர்: முதியவரை தாக்கிய 3 பேர் கைது!

உடையார்பாளையத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (60). விவசாயி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுதாகருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் தேவேந்திரனை சுதாகர், அவரது மனைவி ரஞ்சிதா மற்றும் அவரது உறவினர் சுதா ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வந்த புகாரின் பெயரில் சுதாகர் உட்பட 3 பேரையும் காவல்துறை கைது செய்தது.
News November 8, 2025
அரியலூர்: தீப்பிடித்து எரிந்த கொட்டகை!

சூசையப்பர்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த லாரன்ஸ் (40). விவசாயியான இவருக்கு மேற்கூரையாக கொண்ட கொட்டகை ஒன்று உள்ளது. இதில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென அந்த கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த கொட்டகையில் இருந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், சைக்கிள் மற்றும் உரமூட்டைகள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இது குறித்த புகாரின் பெயரில் உடையார்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.7) இரவு 10 மணி முதல் இன்று (நவ.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


