News March 19, 2024
16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- இருவர் மீது வழக்கு

சிவகங்கை சேர்ந்த 16வயது சிறுமியிடம் 2 ஆண்டுக்கு முன் வாடிப்பட்டியை சேர்ந்த வினோத் 20, காதலிப்பதாக கூறி உடலுறவு கொண்டுள்ளார். இதையடுத்து வினோத்-ன் உறவினரான கௌதம் 31, சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். சிறுமி கர்ப்பமானதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரில் சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த இருவர் மீது இன்று போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News February 3, 2026
மதுரையில் 16 பவுன் நகை கொள்ளை

மதுரை கூடல்புதூர் ராம் முனிநகர் ரயில் தண்டவாளம் பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தனர். இதனை கண்காணித்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அதில் ஒரு வீட்டில் 8 பவுன், மற்றொரு வீட்டில் 8 1/2 பவுன் என மொத்தம் 16 1/2 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
News February 3, 2026
மதுரை: வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் உயிரிழப்பு

செல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(47) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் வீட்டின் படிக்கட்டில் ஏறியபோது தவறி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார். மற்றொரு சம்பவத்தில் ஜராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த காரல்மார்க்ஸ் என்பவர் சம்பவத்தன்று வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 3, 2026
மதுரை: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

மதுரை அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரபாகரன்(29) என்பவர் சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி பொற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரபாகரணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


