News April 18, 2025
73 பந்தில் 158 ரன்.. மெக்கல்லம் சாதனை படைத்த நாள்

2008-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதிதான் ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பமானது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியும், கொல்கத்தா அணியும் மோதின. அதில் கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய நியூசிலாந்தின் ஜாம்பவான் மெக்கல்லம் சரவெடியாக 73 பந்துகளில் 158 ரன்களை விளாசினார். இதனால் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது. பிறகு விளையாடிய ஆர்சிபி 82 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது. மிஸ் யூ மெக்கல்லம் சார்!
Similar News
News December 8, 2025
விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும்: அன்புமணி

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயமாக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று கூறிய அவர், பாமக இருக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்றார். கட்சி பிரச்னை குறித்த கேள்விக்கு, ‘உள்கட்சி பிரச்னைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். கட்சிக்காரர்களிடம் அது பற்றி பேசுவேன். மீடியாவிடம் அல்ல’ என்று பதிலளித்தார்.
News December 8, 2025
பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் கல்யாண் சாட்டர்ஜி(81) காலமானார். 1968-ல் அபஞ்சன் படத்தில் அறிமுகமான இவர், கஹானி, சுகர் பேபி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை வென்றார். நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த அவர், GH-ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்யஜித் ரேயின் பிரதித்வந்தி உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 8, 2025
தவெக உடன் விசிக, காங்., பேச்சுவார்த்தை: நயினார்

திமுக கூட்டணி பலமாக இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து திருவள்ளூரில் பேசிய அவர், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸும், விசிகவும் தற்போது தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், எந்த கூட்டணி எப்படி இருந்தாலும் சரி, வரும் தேர்தலில் NDA கூட்டணி நிச்சயமாக வெல்லும் எனவும் உறுதியாக கூறியுள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


