News April 18, 2025

73 பந்தில் 158 ரன்.. மெக்கல்லம் சாதனை படைத்த நாள்

image

2008-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதிதான் ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பமானது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியும், கொல்கத்தா அணியும் மோதின. அதில் கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய நியூசிலாந்தின் ஜாம்பவான் மெக்கல்லம் சரவெடியாக 73 பந்துகளில் 158 ரன்களை விளாசினார். இதனால் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது. பிறகு விளையாடிய ஆர்சிபி 82 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது. மிஸ் யூ மெக்கல்லம் சார்!

Similar News

News November 7, 2025

கூகுள் மேப்பில் வருகிறது புது அம்சங்கள்

image

இந்திய பயனர்களுக்காக கூகுள் மேப்பில் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. Gemini AI, விபத்து பகுதி, அதிகபட்ச வேக வரம்பு உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுவரப்பட உள்ளன. குறிப்பாக Voice Interaction வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், வழியில் உணவகம் ஏதும் உள்ளதாக, அங்கு பார்க்கிங் எப்படி என வண்டி ஓட்டும் போது, நமது தேவைகளை அதனுடன் கலந்துரையாடி பெறலாம்.

News November 7, 2025

அடுத்த சில மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பொழியும்

image

அடுத்த சில மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவு நேர பயணம் மேற்கொள்வோர் பாதுகாப்பாக செல்லுங்கள். மேலும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

News November 7, 2025

பிஹாரில் அதிகபட்சமாக 64.66% வாக்குப்பதிவு

image

பிஹாரில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளதாக ECI அறிவித்துள்ளது. இதுவரை 62.57% வாக்குப்பதிவே அதிகபட்சமாக இருந்த நிலையில், இன்று 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளது. SIR நடவடிக்கை, ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையே இதற்கு காரணம் என தேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

error: Content is protected !!