News April 18, 2025
73 பந்தில் 158 ரன்.. மெக்கல்லம் சாதனை படைத்த நாள்

2008-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதிதான் ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பமானது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியும், கொல்கத்தா அணியும் மோதின. அதில் கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய நியூசிலாந்தின் ஜாம்பவான் மெக்கல்லம் சரவெடியாக 73 பந்துகளில் 158 ரன்களை விளாசினார். இதனால் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது. பிறகு விளையாடிய ஆர்சிபி 82 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது. மிஸ் யூ மெக்கல்லம் சார்!
Similar News
News December 10, 2025
210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும்: EPS

திமுக தலைவர்கள் அதிமுகவை விமர்சிப்பது கேலிக்கூத்தாக உள்ளது என EPS கூறியுள்ளார். பல தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை பெற்ற அதிமுகவை பற்றி தெரியாமல் CM பேசுவதாக கூறிய அவர், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும் என சூளுரைத்தார். மேலும், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததை பற்றி மட்டுமே விமர்சிக்க முடியுமே தவிர, தங்கள் ஆட்சியில் எந்த குறையும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
நீட்டை ரத்து செய்யாததை கண்டித்து அதிமுக தீர்மானம்

அதிமுக கூட்டத்தில் மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ➤பேரிடர்களின் போது மக்களை பாதுகாப்பதில் தோல்வியடையும் TN அரசுக்கு கண்டனம் ➤அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஆமை வேகம் காட்டுவதாக கண்டனம் ➤கோதாவரி-காவிரி இணைப்பில் அக்கறை இல்லை என கண்டனம் ➤நீட் ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, சிலிண்டருக்கு மானியம் ஆகிய வாக்குறுதிகளை காப்பாற்றாததற்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
News December 10, 2025
திருப்பதியில் அடுத்த ஊழல்: Dupatta Scam!

திருப்பதியில் லட்டு கலப்படம், உண்டியல் பணம் திருட்டை தொடர்ந்து ‘துப்பட்டா ஸ்கேம்’ வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோயிலுக்கு வரும் VIP பக்தர்களுக்கு பட்டு துண்டு அணிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், இவை பட்டால் செய்யப்படாமல், Polyester-ஆல் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2015- 2025 வரை இப்படி ஏமாற்றி, ₹54 கோடி வரை ஊழல் செய்ததாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இன்னும் திருப்பதியில் என்னென்ன ஊழலோ!


