News December 12, 2025
1,53,664 விண்ணப்பங்கள் திரும்பி வரவில்லை – ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவப்பணிகள் முடிவடைந்த நிலையில், மொத்தமாக 1,53,664 படிவங்கள் மட்டுமே திரும்ப பெறப்படாமல் உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் அழகுமீனா தெரிவித்தார். இது விநியோகிக்கப்பட்ட மொத்த படிவங்களின் 9.65% ஆகும்.
15.92 லட்சம் வாக்காளர்களில் 14.39 லட்சம் பேரின் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News March 4, 2026
குமரி: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு.!

பளுகல் அருகே புன்னாக்கரை பகுதியைச் சேர்ந்தவர் டாளி (62). இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் டாளி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது டாளி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த பளுகல் போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பளுகல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 4, 2026
குமரி: நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிப்பு.!

சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா (27). இவர் வெள்ளாங்கோடு முந்திரி ஆலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அவர் தங்கச் சங்கிலி பிடித்துக் கொள்ளவே, ஆறரை பவுன் கொள்ளையர்கள் கையில் சிக்கிக் கொண்டது. இது குறித்து அருமனை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 4, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு ஏதேனும் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம்.


