News September 30, 2024
நிலச்சரிவில் சிக்கி 151 பேர் பலி

நேபாள நிலச்சரிவில் சிக்கி 151 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதில் 300 வீடுகள் நீரில் மூழ்கின. மழையைத் தொடர்ந்து தலைநகர் காத்மாண்டுவில் பயங்கர நிலச்சரிவு நேரிட்டது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News August 26, 2025
விஜய்க்கு எதிராக போட்டியிடும் பிரபல நடிகர் இவரா?

வரும் தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க பல ஸ்கெட்ச்களை போட்டு வருகிறது திமுக. இதில் ஒரு ஸ்கெட்ச்சாக, விஜய் போட்டியிடும் தொகுதியில் விஷாலை களமிறக்க உதய் தரப்பு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. உதய்யின் நெருங்கிய நண்பர் என்பதால் விஷாலும் இதனை ஏற்பார் என பேசப்பட்ட நிலையில், ’நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார் விஷால். ஒருவேளை இருக்குமோ?
News August 26, 2025
கொழுப்பை கரைக்கும் லெமன்கிராஸ் டீ!

எலுமிச்சை போன்ற மணத்தை கொண்டிருந்தாலும், லெமன்கிராஸ் இனிப்பு தன்மையுடையது. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் லெமன்கிராஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. உடல் சோர்வை போக்க லெமன்கிராஸ் டீயை தினந்தோறும் பருகலாம். உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றுவதில் லெமன்கிராஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது. சீரான அளவில் தினமும் லெமன்கிராஸ் டீயை அருந்தினால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.
News August 26, 2025
விடுமுறை… இன்று மதியமே ரெடியா இருங்க மக்களே

முகூர்த்தம், விநாயக சதுர்த்தி மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு, அரசு சார்பில் இன்று முதல் ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக இன்று மதியத்திற்கு மேல் சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், தி.மலை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும், பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் தளங்கள் இருக்கும் ஊர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகின்றன.