News January 18, 2026

1500 குழந்தைகளை மீட்ட பெண் இன்ஸ்பெக்டர்!

image

கடந்த 3 ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்ட RPF இன்ஸ்பெக்டர் சந்தனா சின்ஹாவுக்கு Ati Vishisht Rail Seva Puraskar என்ற இந்திய ரயில்வேயின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. லக்னோவின் சார்பாக் ரயில் நிலைய இன்ஸ்பெக்டரான அவர், 2024-ல் 494 & 2025-ல் 1,032 குழந்தைகளை மீட்டுள்ளார். தனியாக நிற்பவர்கள் & கடத்தல் கும்பலிடம் சிக்கிய குழந்தைகளை நுட்பமாக கவனித்து, அதிரடியாக மீட்பதே அவரது ஸ்டைல்.

Similar News

News February 14, 2026

6 தொகுதிகளை கேட்கிறாரா கமல்?

image

நேற்று மநீம தலைவர் கமல் மு.க.ஸ்டாலினை தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மநீமவுக்கு சென்னையில் மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், ஆலந்தூர் ஆகிய 4 தொகுதிகள் உள்பட 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கமல் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. சென்னை என்பது திமுகவின் கோட்டை என்பதால் 4 தொகுதிகளை மநீமவுக்கு விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை எனவும் அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.

News February 14, 2026

பாரதியார் பொன்மொழிகள்!

image

*நோய் இல்லையென்று மனதில் உறுதி செய்; மனம்போல் உடல் அமையும் – மகாகவி பாரதி. *இந்த உலகில் நாம் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், கண்ணுக்கு தெரியாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்? அன்னை தெரசா. *பிறக்கும்போது உன்னோடு இல்லாத பெயர், நீ இறக்கும்போது உன்னோடுதான் இருக்கும். அதை உன் சாவிற்கு கொடுக்காமல் சரித்திரத்திற்கு கொடு – அடால்ஃப் ஹிட்லர்.

News February 14, 2026

பாஜக வேட்பாளர்கள் யார் யார்? பாஜக இன்று ஆலோசனை

image

இன்று காலை பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பாஜக தேர்தல் மேலாண்மைக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து, வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன்பின், தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் லிஸ்டை அமித்ஷாவிடம் கொடுத்து இறுதி செய்யும் பணி தொடங்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!